காங்கிரஸ் தமிழினத்தின் எதிரின்னா… பாஜக மனித குலத்தின் எதிரி ! தெறிக்கவிட்ட சீமான் !!
காங்கிரஸ் தமிழ் இனத்தின் எதிரி என்றால் , பாஜக மனித குலத்தின் எதிரி என காட்டமாக பேசிய நாம் தமிழர் எட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த காலத்திலும் இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணியோ , உடன்பாடோ வைத்துகொள்ள மாட்டோம் மாட்டோம் என தெரிவித்தார்..
கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, , "சோமாலியா,எத்தியோபியா, வெனிசுலா போன்று நம் நாடு போய்விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம்.
மீத்தேன், ஷேல் கேஸ் என நம் நிலத்தின் மீது அதிமுக, திமுக ஆட்சி கையெழுத்திட்டுமண்ணையே சீர்குலைத்து விட்டார்கள். அதனால்,திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என தெரிவித்தார்.
இது எங்கள் கட்சி கொள்கை முடிவு நாங்கள் எப்போதும் தன்னிச்சையாகவே தேர்தல் களத்தில் விளையாடுவோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் , காங்கிரஸ் கட்சி தமிழ் இனத்தின் எதிரி என்றால் , பாஜக மனித குலத்தின் எதிரி. எந்த காலத்திலும் இரண்டு கட்சியுடன் உடன்பாடு வைத்துகொள்ள மாட்டோம்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் 117 ஆண்கள் 117 பெண்கள் போட்டியிடுவார்கள்.ஜனவரி மாதத்தில் வேட்பாளரை அறிவிப்போம். எங்களுக்கு ஆதித்தமிழர், தமிழ் தேசிய இயக்கம் போன்ற கட்சிகளின் ஆதரவு இருக்கிறது என கூறினார்.
பின்னர் திருவள்ளுவர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், திருவள்ளுவர் இருந்தபோது இந்தியா என்றநாடும் இல்லை. இந்து என்ற மதமும் இல்லை என கூறினார்.
நான் மீசையை எடுத்துவிட்டு , பூணூல் போட்டா என்னை பிராமணர் என்று ஒத்துக் கொள்வார்களா? என கேள்வி எழுப்பிய சீமான் எங்கள் காலம் வரும்பொழுது காவி கட்டும் பாஜக கூட்டம் இருக்காது"என காட்டமாக தெரிவித்தார்.