நடிகர்கள் சம்பளத்தை குறைச்சுக்கணும்! அது பத்தி கருத்து சொல்ல மாட்டேன்!: யார், யார் சொன்னது?!
உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.
அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி.
* ஈராக்கின் மேற்கு மொசூல் நகர் அருகேயுள்ள பதூஷ் என்னும் நகரில் உள்ள ராட்சத பிரேத குழிகளில் இருந்து முப்பதொன்பது இந்தியர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
- சுஷ்மா சுவராஜ்
* காவல் துறையினருக்கு 24 மணி நேரமும் பணி வழங்கப்படுவதால் அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் பண்டிகைகளை கூட குடும்பத்தினருடன் கொண்டாட முடிவதில்லை.
- நீதிபதி கிருபாகரன்
* தமிழகத்தில் ரத யாத்திரை மீது அரசியல் சாயம் பூசுவது சரியல்ல. சபையில் நான் பேசும்போதெல்லாம் தி.மு.க.வினர் குறுக்கிடுகிறார்கள். கடுஞ்சொற்களை எல்லாம் உபயோகப்படுத்துகிறார்கள்.
- எடப்பாடி பழனிசாமி
* தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதைப் பொறுக்க முடியாத மு.க.ஸ்டாலின், மக்களை திசை திருப்பும் வண்ணம் பேசுகிறார்! என எண்ணிட தோண்றுகிறது.
- ஓ.பன்னீர்செல்வம்.
* தமிழர்களை பகுத்தறிவும், தன்மாமனமும் உள்ளவர்களாகத் தலைநிமிர செய்த பெரியாரின் சிலையை சிதைத்திருக்கும் ஈனச்செயல் மானமுள்ள தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
- ஸ்டாலின்
* காவிரி மேலாண்மை வாரியம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அமைத்திட வேண்டும். இந்த விஷயத்தில் கமல்ஹாசன் கருத்துக்கு கருத்து கூற விரும்பவில்லை.
- ரஜினிகாந்த்
* அரசியல் நோக்கத்துடன், மக்களை பிளவு படுத்தும் ஊர்வலத்துக்கு அனுமதியளித்து, யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு.
- கமல்ஹாசன்
* கர்நாடக சட்டசபை தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். எனக்கு காங் தலைமை சீட் தராவிட்டால் சுயேட்சையாக களமிறங்குவேன்.
- குத்து ரம்யாவின் அம்மா ரஞ்சிதா
* தமிழ் சினிமா கடினமான சூழலில் இருக்கிறது. தயாரிப்பாளர்களின் வலி அறிந்து, நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன் வரவேண்டும்.
- விவேக்
* தமிழகத்தில் 80% இந்துக்கள் இருந்தும் கூட பா.ஜ.க.வால் இங்கே வெற்றி பெற முடியவில்லை. இங்கே இந்து, முஸ்லீம், கிறுத்தவர்கள் எல்லாரும் சகோதர, சகோதரிகளாக பழகுகிறார்கள். மத ஒற்றுமைக்காக தி.மு.க. தொடர்ந்து போராடும்.
- தயாநிதி மாறன்.
- விஷ்ணு பிரியா