Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதியோடு அரசியல் பயணத்தில் உறுதியாக இருந்தவர்..! அன்பழகன் மறைவுக்கு வருந்திய எடப்பாடி..!

பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் தனது இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆரம்ப காலம் முதலே முக்கிய பங்கு வகித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

CM palanisamy released death condolence for DMK general sectretary Anbazhagan
Author
Salem, First Published Mar 7, 2020, 12:55 PM IST

திமுக பொதுச்செயலர் அன்பழகன் இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி முன்னணியினர், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்பழகனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.

CM palanisamy released death condolence for DMK general sectretary Anbazhagan

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் குறிப்பில், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான, பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ( 7.3.2020 ) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் தனது இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆரம்ப காலம் முதலே முக்கிய பங்கு வகித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

கருணாநிதி-அன்பழகன்..! இறப்பிலும் இணை பிரியாத உயிர்த் தோழர்கள்..!

CM palanisamy released death condolence for DMK general sectretary Anbazhagan

பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் 1957--ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக முதன் முறையாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அடியெடுத்து வைத்தவர். பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் 43 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும். அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதித்து வந்தவர். ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர். இவர் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவர். அரசியல்வாதி, ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களை கொண்டு தனது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர்.

பெரியப்பாவும் மறைந்து விட்டார்.. என்ன சொல்லி தேற்றிக்கொள்வேன்..? கண்ணீருடன் கலங்கிய ஸ்டாலின்..!

CM palanisamy released death condolence for DMK general sectretary Anbazhagan

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

'அவர் சம்பாதித்தது மதிப்பும் மரியாதையும் தான்'..! அன்பழகனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி..!

Follow Us:
Download App:
  • android
  • ios