ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள காரணத்தினால் விடுதலை சிறுத்தைகள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரை காவல்துறை முதலில் எடுத்துக் கொண்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் தகராறில் ஈடுபட்டதாக பதிவான வழக்கில் பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக விடுதலை சிறுத்தைகளுக்கு இடையேயான மோதல் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக இருந்து வருகிறது. திருமாவளவன் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் பாஜகவினர் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அக்கட்சியின் காயத்ரி ரகுராம் தொடர்ந்து திருமாவளவனுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசி வருகிறார். எனவேதான் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவையொட்டி ஏராளமான அரசியல் கட்சியினர் அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு வந்த பாஜகவினர், திருமாவளவன் செய்தியாளரை சந்தித்து கொண்டிருந்தபோது ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் மாதா கி கோஷம் எழுப்பினர். தங்கள் தலைவருக்கு பாஜகவினர் இடையூறு செய்ததாக கூறி விசிகவினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதில் பாஜகவினர் 3 பேருக்கு மண்டை உடைந்தது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காயத்ரி ரகுராம் உள்ள பாஜகவினர் சிலர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக்கோரி பாஜக கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கோயம்பேட்டில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாஜகவின் கட்சி கொடிகளை கீழே போட்டு விடுதலை சிறுத்தையினர் மிதித்ததாகவும், கல்வீசி தாக்கியதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதிய குமார் என்பவர் அளித்த புகாரின் தன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள காரணத்தினால் விடுதலை சிறுத்தைகள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரை காவல்துறை முதலில் எடுத்துக் கொண்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். தம்மீதான புகாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறியிருக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மைக்குப் புறம்பானது என்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தான் முதலில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எனவே சமூக வலைத்தளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் கட்சி சார்ந்த சண்டைகளும் நடைபெற்று வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் 30 நாட்களுக்குள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
