Asianet News TamilAsianet News Tamil

மாறன் விவகாரத்தில் கழகங்களை வெளுக்கும் பா.ரஞ்சித்..!! பெரியாரை குறிப்பிட்டு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றினார்.

தயாநிதி மாறனின் இந்த பேச்சை பாரதிய ஜனதா கட்சி மிக கடுமையாக விமர்சித்துள்ளது ,  அதாவது திமுக தொடர்ந்து தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ,

cinema director pa ranjith attach dmk
Author
Chennai, First Published May 15, 2020, 3:08 PM IST

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலித் மக்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதையடுத்து  " சமூகநீதி அறியாமையால் தலித் வெறுப்பு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இயல்பாக மண்டிக் கிடக்கிறது என்பதை எப்போது உணரப் போகிறீர்கள் கழகங்களே "  என திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார் .  ரஞ்சித்தின்  இந்த  கேள்வி மாறன் விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது . திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன் டி. ஆர் பாலு ஆகியோர் திமுவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ்  பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினார் ,  இந்த மனுக்களை கொடுத்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தபோது ,  அங்கு பேசிய தயாநிதி மாறன் ,  தலைமைச் செயலாளர் எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார் .  நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா எனக்கூறி கோபத்தை வெளிப்படுத்தினார்.  தயாநிதிமாறன் செய்தியாளர்கள் மத்தியில் இப்படி பேசியது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது .

cinema director pa ranjith attach dmk

இந்நிலையில் இது குறித்து தெரிவித்த திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் , தலைமைச் செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது  சரி ,  ஆனால் அந்த வேகத்திலேயே நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா என்றது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது .  அதில் ஏதும் உள்நோக்கம் இல்லை என்றாலும் ,  அவரின் பேச்சு இந்த மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தை பாதித்திருக்கிறது  இது தோழமைக் கட்சியின் சுட்டுதல் என தனது ஆதங்கத்தை சொல்லமுடியாமல் வெளிப்படுத்தினார் . இது குறித்து தெரிவித்த  தலித் மக்களுக்கான சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் ,  " ஒருவர் ஆதிதிராவிட மக்களுக்கு நாங்கள் போட்ட பிச்சை எடுக்கிறார் " இன்னொருவர் நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா என்கிறார் . திமுகவினருக்கு  சமத்துவம் குறித்தும் , மாண்பு குறித்தும் அண்ணல் அம்பேத்கர் குறித்தும் அவசியம் பயிற்சி தேவை என அக்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார் . 

cinema director pa ranjith attach dmk

தயாநிதி மாறனின் இந்த பேச்சை பாரதிய ஜனதா கட்சி மிக கடுமையாக விமர்சித்துள்ளது ,  அதாவது திமுக தொடர்ந்து தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ,  தயாநிதி மாறனின் இந்த பேச்சு ஒட்டுமொத்த பட்டியலின சமுதாயத்தை மட்டுமல்லாமல் தமிழக மக்கள் அனைவரையும் அவமானப்படுத்தி உள்ளது ,   தலைகுனிய வைத்துள்ளது ,  கடந்த 2017 ஆம் ஆண்டு  தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் அவர்களை திமுக உறுப்பினர்கள் அவரது இருக்கையில் இருந்து அகற்றியதையும் அவரை வசை பாடி அவரின் சட்டையை கிழித்து அவமானப்படுத்தியதை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை ,  தான் ஒரு தலித் என்பதால் தான் திமுக தன்னை குறி வைத்து தாக்குகிறது என அவர் கூறியதையும் யாரும் இன்னும் மறக்கவில்லை .

 cinema director pa ranjith attach dmk

சமீபத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆதிதிராவிடர்களுக்கு நீதிமன்ற பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை அவமானப்படுத்தினார் .  இப்போது ,  நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா என்றும் பட்டியலின சமுதாயம் மூன்றாம் தர குடிமக்கள் தான் என்ற வன்மத்தோடு சாதிய சிந்தனையோடுதான் தயாநிதிமாறன் பேசுகிறார் என்பதை அவரது  பேச்சில் தெளிவாகிறது என சுட்டிக்காட்டியுள்ள பாஜக , தயாநிதி மாறன் மீது தமிழக காவல்துறை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. 

cinema director pa ranjith attach dmk

தமிழகம் முழுவதிலும் இருந்து தயாநிதிமாறனின் பேச்சுக்கு எதிரான கண்டனக்குரல் வலுக்க தொடங்கியுள்ளது,  இந்நிலையில் இது குறித்து கருத்த தெரிவித்துள்ள,  திரைப்பட இயக்குனர் ப. ரஞ்சித் , நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா..?  சமூக வெறுப்பு ,  அவமதிப்பு ,  உரிமை மறுப்பு ,  தலித் மக்களுக்கு இவைகளையெல்லாம் செய்யலாம் என ஒப்புக்கொள்கிறீர்களா.?  சமூகநீதி அறியாமையால் தலித் வெறுப்பு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இயல்பாக மண்டிக் கிடக்கிறது என எப்போது உணர்வீர்கள் கழகங்களே.  என கேள்வி அவர் எழுப்பி உள்ளனர் ,   பெரியாரை மறந்த கழகங்கள்  என்ற ஹஸ்டாக்கில்  இதை பதிவிட்டுள்ளார் ,  அவரின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இது  தயாநிதி மாறன் பிரச்சனையை மேலும் தீவிரமாக்கியுள்ளது . 
 

Follow Us:
Download App:
  • android
  • ios