Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் எடப்பாடி-விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

சிபிஐ ரெய்டுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பெரும் சி்க்கலில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தி்த்துள்ளார். சிபிஐ ரெய்டு விஜயபாஸ்கருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Chief Minister Edappadi-Vijayapaskar sudden meet
Author
Chennai, First Published Sep 7, 2018, 2:51 PM IST

சிபிஐ ரெய்டுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பெரும் சி்க்கலில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தி்த்துள்ளார். சிபிஐ ரெய்டு விஜயபாஸ்கருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாக செய்ததாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

Chief Minister Edappadi-Vijayapaskar sudden meet

அப்போது, அவர் மீது குட்கா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதன்பின், அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். புதுக்கோட்டையில் இருக்கும் அவரது வீடு, கல் குவாரி, கல்லூரி உள்ளிட்ட 35 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.85 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதன்பின்னர், குட்கா ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி, டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை எவ்வித குளறுபடியும் நடைபெறாமல் இருக்க, அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையொட்டி கடந்த சனிக்கிழமை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னசாமியிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, தமிழக அரசுப் பணியில் வேலை வாங்கி தருவதாக கூறி, அமைச்சர் விஜயபாஸ்கரும், அவரது உதவியாளர்களும் ரூ.12 லட்சம் பெற்றார் என வாக்குமூலம் அளித்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். Chief Minister Edappadi-Vijayapaskar sudden meet

இந்நிலையில், சென்னை மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், மற்றும் அவர்களது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதையொட்டி சென்னை கீரின்வேஸ் சாலையில், அமைச்சர்கள் குடியிருக்கும் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் வீடு, முன்னாள் சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.Chief Minister Edappadi-Vijayapaskar sudden meet
 
இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், குட்கா அதிபர் மாதவராவிடம் நடத்திய விசாரணையின்போது, அவரிடம் இருந்து டைரி கைப்பற்றியதாகவும், அதில் உள்ள தகவலின்படி சோதனை நடப்பதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் முதல்வர் எடப்பாடியை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios