Asianet News TamilAsianet News Tamil

அரசியலில் குதிக்கும் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு? யார் கட்சியில் தெரியுமா? வேற மாறி.!!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு பிரபல அரசியல் கட்சியில் சேர உள்ளார் என்பது பேசுபொருளாகியுள்ளது.

Chennai Super Kings player ambati rayudu praises ap cm ys Jaganmohan reddy
Author
First Published Apr 21, 2023, 11:06 AM IST

தெலுங்கு மக்களுக்கு மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அறிமுகம் தேவையில்லாத பெயர் அம்பதி ராயுடு. ஐபிஎல்லில் பிஸியாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தான்.

கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு தன்னுடைய அரசியல் இன்னிங்ஸை தொடங்க இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக அம்பதி ராயுடுவின் கருத்துகள் குறித்து அரசியல் பிரவேசம் செய்ய போகிறாரா ? என்பது விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவர் எந்தக் கட்சியில் சேரப்போகிறார் என்பது குறித்த தெளிவு இல்லாவிட்டாலும், அம்பதி ராயுடுவின் நுழைவு உறுதி என்று கூறுகின்றனர்.

Chennai Super Kings player ambati rayudu praises ap cm ys Jaganmohan reddy

இதையும் படிங்க..400 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் நிங்குலூ ஹைபிரிட் சூரிய கிரகணம்.. எங்கு, எப்போது காணலாம் - முழு விபரம்

அம்பதி ராயுடுவின் சமீபத்திய ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. அம்பதி ராயுடு ஆந்திர முதல்வர் ஜெகனை பாராட்டினார். அம்பதி ராயுடு கடந்த புதன்கிழமை ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் நௌபாடா சபாவில் முதல்வரின் பேச்சுக்கு பதிலளித்து தனது கருத்தை தெரிவித்தார். கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எங்கள் முதல்வர் ஜெகன் அருமையாகப் பேசினார். மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் உங்கள் மீது முழு நம்பிக்கையும் நம்பிக்கையும் உள்ளது சார்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் அவர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யில் சேரப் போகிறார் என்ற விவாதம் தொடங்கியது. இந்த ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே ஒரு பேட்டியில்  அம்பதி ராயுடு, “கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததும் மக்கள் மத்தியில் இருக்க விரும்புவதாக கூறினார்.

மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அரசியலில் ஈடுபடுவது குறித்து யோசிப்பேன். நேர்மையாக பணியாற்றுவேன்” என்றார்.  கடந்த 2014ல், உப்பலில் இலங்கைக்கு எதிராக டீம் இந்தியா விளையாடிய போட்டிக்கு, கே.சி.ஆர் வீரர்களை அறிமுகம் செய்யும் போது அம்பதி ராயுடுவின் கையை கேசிஆர் முத்தமிட்டார். ராயுடு பிஆர்எஸ் எம்எல்சி கவுசிக் ரெட்டியுடன் கிரிக்கெட் விளையாடினார்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அவர் பிஆர்எஸ்ஸில் சேருவார் என்ற விவாதம் நடந்தது. ஆனால் ராயுடு தற்போது ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மீது புகழாரம் சூட்டிய நிலையில், அவர் ஒய்.எஸ்.ஆர்.சி.பியில் சேருவார் என்ற பிரச்சாரம் தொடங்கியுள்ளது. ராயுடு எந்த கட்சியுடன் தனது அரசியல் இன்னிங்ஸை தொடங்குவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க..போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ

Follow Us:
Download App:
  • android
  • ios