சென்னைவாசிகளே... இனி இது கட்டாயம்... அமலுக்கு வந்தது அதிரடி உத்தரவு..!
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேலும் கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க பொது மக்கள் வெளியே செல்லும் பொழுது கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று தொற்று நோய் தடுப்பு மற்றும் பொதுச் சுகாதார சட்டங்களின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அணியத் தவறினால், அவர்களின் அவசரகால போக்குவரத்து அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படுவதோடு, மூன்று மாதங்களுக்கு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இத்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது,” என உத்தரவிடப்பட்டுள்ளது.