Asianet News TamilAsianet News Tamil

இதை சொல்வதால் ஒன்றும் அவமானமல்ல... தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்...!

கொரோனா பாதித்துவர்கள், பலியானவர்களின் புள்ளிவிவரங்களை தெரிவிப்பது அவமானமல்ல என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Chennai high court said to release corona death details to TN    Government
Author
Chennai, First Published May 31, 2021, 6:32 PM IST

கொரோனா தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக மருத்துவ மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல்  செய்தார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதாகவும், மத்திய அரசு 650 டன் ஆக்சிஜன் ஒதுக்கியுள்ளதாகவும், அதை வீணாக்காமல் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை பொறுத்தவரை, 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 83.08 லட்சம் டோஸ்களும், 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்காக 13.10 லட்சம் டோஸ்களும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Chennai high court said to release corona death details to TN    Government

மே 30ம் தேதி நிலவரப்படி, 45 வயதுக்கு மேற்பட்ட 75.73 லட்சம் பேருக்கும், 18 முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு 11.97 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய இருப்பு இன்னும் இரு நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்பதால் போதுமான தடுப்பூசி மருந்துகளை சப்ளை செய்யக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இதுதவிர 3.5 கோடி டோஸ்கள் கொள்முதலுக்காக சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் முகத்தை உறவினர்களுக்கு காட்டுவதை பொறுத்தவரை, ஏற்கனவே வழிகாட்டி விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுளாதாகவும், அதன்படி தனிமைப்படுத்தல் அறையில் இருந்து எடுக்கும் போதும், அடக்கம் அல்லது தகனம் செய்யும் முன்பும் முகங்களை காட்ட அனுமதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai high court said to release corona death details to TN    Government

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன், அவர்களின் படிப்பை அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவியும், உறவினர்களால் கவனிக்கப்படும் குழந்தைகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் உள்ள முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொரோனா தொடர்பான புள்ளிவிவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், கொரோனா நிவாரண உதவிகள் வழங்க செல்லும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் ஏராளமான தொண்டர்கள், தடுப்பு விதிகளை பின்பற்றாமல் செல்வதாகவும் வழக்கறிஞர்கள் குறை கூறினர்.

Chennai high court said to release corona death details to TN    Government

இதைக் கேட்ட நீதிபதிகள், கொரோனா இரண்டாவது அலை தணிந்து வருவதாகவும், மத்திய - மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாகவும் தெரிவித்தனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்ற இலக்கை விரைந்து எட்ட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கொரோனா தொற்று எண்ணிக்கை, பலி எண்ணிக்கை விவரங்களை தெரிவிப்பது அவமானமல்ல எனவும், அந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios