Asianet News TamilAsianet News Tamil

Breaking:முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் தொடர்புடைய 9 இடங்களில் சிபிஐ சோதனை

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு  தொடர்புடைய டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 

CBI raids 7 locations, including Chennai and Delhi owned by former Union Minister P Chidambaram
Author
India, First Published May 17, 2022, 9:26 AM IST

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா வெளிநாட்டிலிருந்து பணம் பெற உதவியதாக சிபிஐ-ல் ஏற்கெனவே வழக்கு இருந்தது.  இந்த வழக்கில் 4 முறை சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் தொடர்புடைய இடங்களில்  சோதனை நடத்தி இருந்தனர். இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர். இந்தநிலையில்  ப.சிதம்பரத்தின் மகனும் சிவங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

CBI raids 7 locations, including Chennai and Delhi owned by former Union Minister P Chidambaram
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம்  தொடர்புடைய டெல்லி, மும்பை சென்னை மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில்  மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வழக்கு தொடர்பாக, தற்போது 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios