லட்சக்கணக்கான ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமான  கருணாநிதியை போர்குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் அறிவிக்கும்வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என விழுப்புரத்தில் நடந்த போராட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடியாக பேசினார்.

ஈழத்தமிழர்களுக்குஎதிராகநடைபெற்றபோரில்இலங்கைராணுவத்திற்குதி.மு..- காங்கிரஸ்கூட்டணிஅரசுஉதவியதன்மூலம்பல்லாயிரக்கணக்கானஈழத்தமிழர்கள்படுகொலைசெய்யப்பட்டதாகவும், இதற்குகாரணமானதி.மு..-காங்கிரஸ்கட்சியினரைபோர்க்குற்றவிசாரணைக்குஉட்படுத்திதண்டிக்ககோரிதமிழகம்முழுவதும்மாவட்டதலைநகரங்களில்கண்டனபொதுக்கூட்டம்நடைபெறும்என்று.தி.மு.. தலைமைஅறிவித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன்படி சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் அமைச்சர் எஸ்,பிவேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். விழுப்புரத்தில் நடைபெற்ற போதுக் கூட்டத்தில் பேசிய தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், இலங்கைத் தமிழர்களுக்க திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து செய்த துரோகங்களை பட்டியலிட்டார்.

தங்கள் சுய நலத்துக்காக எப்படி எல்லாம் மத்திய காங்கிரஸ் அரசை திமுகவினர் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை குறிப்பிட்ட அமைச்சர் சண்முகம், லட்சக்கணக்கான ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமான கருணாநிதியை போர்குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் அறிவிக்கும்வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என அதிரடியாக பேசினார்.