Asianet News TamilAsianet News Tamil

3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்.. நடக்குமா? அல்லது கைவிடப்படுமா? முக்கிய தகவலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!

தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

Byelection for 3 constituencies..election commission Satyabrata Sahoo information
Author
Tamil Nadu, First Published Jul 13, 2020, 12:47 PM IST

தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம்,  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் எம்.எல்.ஏ.க்கள் மறைவால் காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்தத் தொகுதிகளின் திமுக எம்.எல்.ஏ.க்களான கே.பி.பி. சாமி, காத்தவராயன், ஜெ.அன்பழகன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். வழக்கமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இறந்தால், 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், ஓராண்டுக்குக் குறைவாக சட்டப்பேரவையின் காலம் இருந்தால், இடைத்தேர்தலை நடத்தாமல் விட்டுவிடவும் தேர்தல் ஆணையத்தால் முடியும்.

Byelection for 3 constituencies..election commission Satyabrata Sahoo information

கடந்த 2005-ம் ஆண்டில் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் சட்டப்பேரவை மே மாதத்தில் நடைபெற்றது. அதாவது, சட்டப்பேரவை காலம் முடிவதற்கு ஓராண்டு இருந்த நிலையில் நடத்தப்பட்டது. இதேபோல 2015-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக வசதியாக ஆர்.கே. நகர் தொகுதியில் உடனடியாகவும் மே மாதத்திலும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலும் சட்டப்பேரவையின் காலம் ஓராண்டுக்கு முன்பாக நடத்தப்பட்டது.

Byelection for 3 constituencies..election commission Satyabrata Sahoo information

எனவே திருவொற்றியூர், குடியாத்தம்,  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தேர்தல் நடத்துவதில் சந்தேகம் இருந்து வருகிறது. இப்போது சட்டப்பேரவையின் காலம் ஓராண்டுக்கும் குறைவாகக் குறைந்துவிட்டதால், இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் நடத்த தேவையில்லை என்று முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்துவிட்டதாகக் கூறப்பட்டது. 

Byelection for 3 constituencies..election commission Satyabrata Sahoo information

இந்நிலையில், இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில்:- 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது என்றார். 

Follow Us:
Download App:
  • android
  • ios