Asianet News TamilAsianet News Tamil

பேருந்து ஓட்டுனர்கள் எம்ஜிஆர் பாட்டுதான் கேட்பார்கள்.. அரசு விழாவில் அமைச்சர் கேடிஆர் கலகல பேச்சு.

போக்குவரத்து தொழிலாளர்கள் அதிலும் குறிப்பாக ஓட்டுநர்கள் வாகனத்தை ஓட்டும்பொழுது எம்ஜிஆர் பாட்டு கேட்டு தன் வாகனத்தை இயக்குகின்றனர். அந்தளவுக்கு எம்ஜிஆர் மீது பற்று வைத்துள்ளனர். 

Bus drivers will listen to MGR song Only .. Minister KTR Comedy speech at the official function.
Author
Chennai, First Published Jan 25, 2021, 10:41 AM IST

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு போக்குவரத்து பணிமனையில் ஒய்வூதிய பணப்பலன்கள்  80 போக்குவரத்து ஊழியர்களுக்கு  28 கோடி 78லட்சம் மதிப்பில் காசோலைகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

போக்குவரத்து தொழிலாளிகளின்  ஒய்வூதிய பணம் கிடைக்காது  என பலர் கூறினார்கள். ஒய்வூதியம் கிடைக்காது என போக்குவரத்து தொழிலாளிகளிடம் துண்டி விட்டனர். அதை  எல்லாம்  முறியடித்து தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 900கோடி வழங்கியுள்ளார். 

Bus drivers will listen to MGR song Only .. Minister KTR Comedy speech at the official function.

பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் நாள்தோறும் 2000 க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து அவருடைய மனநிலை தெரிந்து வைத்து பணியாற்றுபவர்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் அதிலும் குறிப்பாக ஓட்டுநர்கள் வாகனத்தை ஓட்டும்பொழுது எம்ஜிஆர்பாட்டு கேட்டுதன் வாகனத்தை இயக்குகின்றனர். 

Bus drivers will listen to MGR song Only .. Minister KTR Comedy speech at the official function.

அந்தளவுக்கு எம்ஜிஆர் மீது பற்று வைத்துள்ளனர். மேலும் கொடுக்கப்பட்டுள்ள காசோலையை பணத்தை பத்திரமாக வைத்திருங்கள். சீட்டு மற்றும் தனியார் நிறுவனங்களில் முதலீடுசெய்து விட்டு ஏமாந்து விடாமல், வீடு நிலம் போன்றவற்றை நிறைய  வாங்கிக் கொண்டு சந்தோஷமா இருக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios