BREAKING NEWS: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு.. அலறவிட்ட ஸ்டாலின்.
கொரோனா விதிமுறைகளை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 90 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 90 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா விதிமுறைகளை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 90 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் சேலத்தில் தொண்டர்களுடன் தனது இல்லத்தின் முன்பு எடப்பாடி பழனிச்சாமி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியவாது.
எனது வீட்டுக்கு முன் இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக சுமார் 505 அறிவிப்புகள், அதாவது தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. அதில் சில முக்கியமான அறிவிப்புகளை கூட அவர்கள் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் நேரத்தில் தவறான பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களிடம் வாக்கு பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது திமுக. எனவே தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம், அதற்காகத்தான் இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். தேர்தல் முடிந்தவுடன் அது ரத்து செய்யப்படும் என்றார், ஆனால் தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என கூறினார், அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக பார்த்துக்கொண்டோம். 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்து அதை நடைமுறைப்படுத்தினோம். ஆனால் இப்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 90 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாககவும், உரிய அனுமதி இல்லாமல் ஆர்பாட்டத்தில் ஈடுப்ட்டதற்காகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக அரசின் இந்த நடவடிக்கை அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.