Asianet News TamilAsianet News Tamil

நேரு ஒரு பெண்பித்தர் ….. ஆனால் மோடி பெண்களை சீண்டாதவர்….காங்கிரசை அதிர வைத்த பாஜக எம்எல்ஏ!!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு ஒரு பெண் பித்தம் என்றும், அவரைப் போல பெண் ஆசை காட்டி மோடியை வீழ்த்திவிட முடியாது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் உத்தர பிரதேச எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 

BLP MLA talk about Nehru
Author
Uttar Pradesh, First Published Sep 18, 2019, 10:02 PM IST

பாஜகவில் உள்ள சில அரசியல்வாதிகள் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் எந்த எல்லைக்கும் சென்று அவர்களை இழிவுபடுத்துவார்கள். அந்த வகையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் விக்ரம் சிங் சைனி நேருவையும் அவர் குடும்பத்தாரையும் சேர்த்து இழிவாக பேசியுள்ளார்.

மோடியின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விக்ரம் சிங் தனது முகநூல் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்தைக் கூறியிருந்தார். அதில் பாரத தாயின் புகழை உயர்த்தும் நோக்கில் செயல்படுகிறார் மோடிஜி. மோடி பாரத தாயின் மகன்” என எழுதியுள்ளார். 

BLP MLA talk about Nehru

மேலும், அந்தப் பதிவை முடிக்கும்போது , மோடியை பெண் வழியில் வீழ்த்திவிடலாம் என நினைக்காதீர்கள், ஏனென்றால் அவர் மோடி,  நேரு அல்ல, என்று எழுதியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் விக்ரம் சிங்கிடம் கேள்வியெழுப்பியதற்கு , மோடி மீது ஒரு பெண் அரசியல்வாதி ஆசை கொண்டார். ஆனால், மோடி அதை பொருட்படுத்தாமல் நாட்டை மட்டும் கவனித்தார். ஏனென்றால் அவருக்கு நாட்டைத் தவிர வேறெதுவும் தெரியாது. 

BLP MLA talk about Nehru

ஆனால் ஜவஹர்லால் நேரு பெண்பித்தராக இருந்ததால்தான், ஆங்கிலேயர்களின் துணையுடன் இந்திய நாட்டைப் பிரித்தார். அவரைப்போலவே அவர் பேரன் ராஜிவ் காந்தியும் இத்தாலி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இப்படிதான் நேரு குடும்பம் செயல்பட்டு வருகிறது” என சர்ச்சைக்குரிய முறையில் பேசியுள்ளார்.
விக்ரம் சிங் சைனியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios