Asianet News TamilAsianet News Tamil

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்கிறார் - அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

BJP state president annamalamai slams minister moorthy in madurai
Author
First Published Aug 5, 2023, 4:47 PM IST

என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாஜக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையிலும், திமுக அரசின் 2 ஆண்டு ஆட்சியின் குறைபாடுகள எடுத்துரைக்கும் வகையிலும பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டுவருகிறார். தொடர்ந்து 9ம் நாளாக இன்று மதுரை ஒத்தக்கடை நரசிங்கபெருமாள் கோவில் முன்பாக நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை ஒத்தக்கடை உத்தங்குடி சாலை சந்திப்பு வரை நடை பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் அவரை சந்தித்து மனுக்களை அளித்தனர்.

இதனை தொடர்ந்து ஒத்தக்கடை பகுதியில் பேசிய அண்ணாமலை, விஞ்ஞான முறையில் பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் அமைச்சர் மூர்த்தி ஊழல் செய்கிறார். மூர்த்தி மகன் கல்யாணத்துக்கு செலவு செய்த தொகையில் சர்க்கரை ஆலையை செயல்படுத்தி இருக்கலாம் என பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர்.  திமுக ஆட்சி தங்கள் குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக நடக்கிறது. இந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடைபெறுகிறது. அதனை அப்புறப்படுத்தும் நேரம் வந்துவிட்டது.

என்.எல்.சிக்காக மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும் - அன்புமணி எச்சரிக்கை

மதுரைக்கு எய்ம்ஸ் மோடி அறிவித்திருக்கிறார். இந்தியாவில் உள்ள எய்ம்ஸ்க்கு மாறுபட்டது, வட இந்தியாவில் டெல்லி எய்ம்ஸ் போல தென்னிந்தியாவிற்கான எய்ம்ஸாக மதுரை எய்ம்ஸ் இருக்கும். 2600 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.  மதுரை எய்ம்ஸ் 2026ம் ஆண்டு மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். 22 ஆயிரம் பேருக்கு மதுரை எய்ம்ஸ் மூலமாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

திமுக 1967ம் ஆண்டில் இருந்து 5 முறை ஆட்சியில் உள்ளபோதும் எய்ம்ஸ் பற்றி யோசிக்காதவர்கள். இப்போது எய்ம்ஸ் சரியில்லை என வாய்சவடால் பேசுகின்றனர். திமுக குடும்பத்தினர் 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி கொள்ளை என அமைச்சர் பிடிஆர் கூறினார், அதில் 2 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கலாமே என்றார்.

100 கோடி ரூபாய்க்கு கலைஞர் நூலகம், பேனா சிலை என செலவு செய்யும் திமுக அரசு ஆனால் கரும்பு ஆலை திறக்க நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்றார்கள். ஆனால் குருப் 4 தேர்வு முடிந்து 13 மாதம் ஆகிறது. அதன் முடிவை கூட வெளியிட முடியவில்லை, 2 ஆண்டுகளில் 2 ஆயிரம் பணி தான் கொடுத்துள்ளீர்கள்.

கோவை இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சூப் கடை உரிமையாளர் கைது

மதுரை அரசு மருத்துவமனையில் 1500 செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆனால் சென்னையில் செவிலியர்கள் பணி வேண்டி போராடுகிறார்கள். அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஆனால் சென்னையில் பணிக்காக போராடிவருகின்றனர். வெறும் அறிக்கை தான் திராவிட மாடல் ஆட்சி. கமிசன், கலெக்சன், கரெப்சன் என்பது தான் திமுக ஆட்சி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் காவிரி நீர் குறித்தும் பேசுவதில்லை, கேரளா கழிவுகள் கொட்டுவது குறித்தும் பேசுவதில்லை. மோடியை பற்றி மட்டுமே பேசுகிறார். கம்யூனிஸ்ட்கள் சந்தர்ப்பவாதிகள்.

மதுரைக்கு பாஜக சார்பில் எம்பி வேண்டும், தமிழக மக்கள் மோடியை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 40க்கு 40 என்ற நம்பிக்கை உள்ளது. மதுரையில் தேஜக கூட்டணி எம்பி வேண்டும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios