கடந்த காலங்களில் ராஜ் தாக்கரே தனித்து போட்டி சிவசேனா - பாஜக கூட்டணிக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கிறார். இந்த முறை அப்படி எதுவும் ஆகிவிடுமோ என்ற கலக்கத்தில் பாஜக-சிவசேனா கட்சிகள் உள்ளன.
மகாராஷ்டிராவில் தொகுதிகளை அள்ளலாம் என நினைத்திருந்த பாஜக - சிவசேனா கூட்டணிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளார் எம்என்எஸ் எனப்படும் மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே.
உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து நாட்டின் அதிக மக்களவை தொகுதிகள் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. இங்கே 48 தொகுதிகள் உள்ளன. மகாராஷ்டிராவில் மூன்று கட்ட தேர்தல் முடிந்தவிட்டது. இறுதிகட்ட தேர்தல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் சிவசேனா, பாஜக, எம்.என்.எஸ். ஆகிய கட்சிகள் ஓரணியில் இடம்பெற்றிருந்தன. எம்.என்.எஸ். தலைவர் ராஜ் தாக்கரேயின் பிரசாரம் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு பெரும் உதவியாக இருந்தது.

தேர்தலுக்கு பிறகு ராஜ் தாக்கரேவுக்கு, பாஜக, சிவசேனா உரிய மரியாதை தராமல் போனதால், கூட்டணியிலிருந்து விலகினார். பாஜக கூட்டணியிலிருந்து தள்ளிப்போன சிவசேனாவும் பாஜகவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் குடைச்சல் கொடுத்துவந்தது. ஆனா, இந்த மக்களவைத் தேர்தலில் வெல்லும் வகையில் இந்த இரு கட்சிகளும் மீண்டும் அணி சேர்ந்துள்ளன. இதையடுத்து இந்தத் தேர்தலில், எம்.என்.எஸ். கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

