என்னே அவசரம்..! நயினார் நாகேந்திரன் செயலால் அதிர்ச்சியில் பாஜக..!
பாஜக தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பட்டியலை அறிவிக்காத நிலையில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் நயினார் நாகேந்திரன்.
பாஜக தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பட்டியலை அறிவிக்காத நிலையில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் நயினார் நாகேந்திரன்
.
பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன் “நல்ல நாள் என்பதால் இன்றே வேட்புமனு தாக்கல் செய்ததாகவும், வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்”என்றும் தெரிவித்தார்.
அதிமுகவில் முக்கிய புள்ளியாக திகழ்ந்த நயினார் நாகேந்திரன், தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது பாஜக சார்பில் பொட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்கிற வேட்கையில் அவர் இருக்கிறார்.