என்னைக் கொல்ல என் மீது பாஜக தாக்குதல் நடத்தலாம்' என அசம்கானின் மகன் குற்றம்சாட்டியுள்ளார். 

என்னைக் கொல்ல என் மீது பாஜக தாக்குதல் நடத்தலாம்' என அசம்கானின் மகன் குற்றம்சாட்டியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சமாஜ்வாதி கட்சியின் மூத்த அரசியல்வாதியான அசம் கானின் மகன் அப்துல்லா ஆசம் கான். பாரதிய ஜனதா கட்சியின் ஒரு சிலர் தன்னை ஒரு போலி வழக்கில் கைது செய்ய சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். என்னைக் கொல்ல பாஜக தாக்குதல் நடத்தலாம்' என அசம்கானின் மகன் குற்றம்சாட்டியுள்ளார்

சமாஜ்வாதி கட்சியின் மூத்த அரசியல்வாதியான அசம் கானின் மகன் அப்துல்லா ஆசம் கான், ஞாயிற்றுக்கிழமை, பாரதிய ஜனதா கட்சியின் ஒரு பகுதியினர் சதி செய்து என்னை ஒரு போலி வழக்கில் நிறுத்துவதற்கான வேலைகளில் உள்ளது என்று கூறினார். உத்தரபிரதேசத்தில் உள்ள சுவார் மற்றும் ராம்பூர் தொகுதிகளில் இருந்து பாஜக வேட்பாளர்கள் அவரை கொல்ல "தாக்குதல் அல்லது சாலை விபத்தை திட்டமிடலாம்" என்றும் அவர் கூறினார்.


 “போலி வழக்கில் என்னை சிறையில் அடைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சுவார் மற்றும் ராம்பூர் தொகுதிகளின் பாஜக வேட்பாளர்கள் என்னைக் கொல்ல ஒரு தாக்குதல் அல்லது சாலை விபத்தைத் திட்டமிடலாம்.

அப்துல்லா அசம் கான், உ.பி., சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக, ராம்பூரில் உள்ள சுவார் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தனது பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள போலீசார் நம்பகமானவர்கள் அல்ல என்றும், அவர்கள் தன்னை எப்போது வேண்டுமானாலும் சுட்டு வீழ்த்தலாம் என்று சந்தேகிக்கிறார் என்றும் அவர் கூறியிருந்தார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அப்துல்லா, “பாஜகவிடம் அதிகாரிகள் உள்ளனர். “காவல்துறை பாஜகவுடன் உள்ளது, இரண்டு அரசுகள் பாஜகவுடன் உள்ளன. நான் தனியாக இருக்கிறேன். என்னுடன் யாரும் இல்லை. என்னுடன் இருக்கும் போலீஸ்காரர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. போலீஸ் என்னை சுடலாம்... அவர்கள் என் பாதுகாப்புக்காக நிறுத்தப்படவில்லை.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, அப்துல்லாவின் தந்தை அசம் கானை ராம்பூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது, அங்கு அவர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால், தற்போது அசம் கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் வாடுகிறார்.

உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் அதே சட்டமன்ற தொகுதியில் இருந்து சிறையில் அடைக்கப்பட்ட தலைவரின் மகனும் மனைவியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

சமீபத்தில் சிறையில் இருந்து வெளிவந்த முகமது அப்துல்லா ஆசம் கான் மற்றும் அவரது தாயார் தசீன் பாத்மா இருவரும் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சுவார் சட்டமன்ற தொகுதியில் இருந்து பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும்.