பாஜக போடுற ஆட்டம் எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா..!! குமுறும் காங்கிரஸ் மூத்த தலைவர்..!!
அதேபோல் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களான டி. ராஜா, மற்றும் சீதாராப் யெச்சூரி ஆகியோரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது . திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன . பல்வேறு கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர் . மேற்கு வங்கம், வடகிழக்கு வாகனங்களில் போராட்டம் பற்றி எரிகிறது . தென்னிந்தியாவில் கேரளா, தமிழகம் கர்நாடகா, போராட்டம் வலுவடைந்துவருகிறது.
பாரதிய ஜனதா கட்சியானது நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலையை நடைமுறைபடுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி , செய்தியாளர்களிடம் பேசுகையில் , அதாவது தடுப்புக்காவல் சட்டப்பிரிவு 144-ஐ பயன்படுத்தி அநேக காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் குறிப்பாக அஜய் மகேன் மற்றும் அவரது குடும்பத்தினர், சந்திப் தீக்ஷித் அவரது மனைவி மற்றும் சகோதரி, மற்றும் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் நதீம் ஜாவேத் ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் . அதேபோல் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களான டி. ராஜா, மற்றும் சீதாராப் யெச்சூரி ஆகியோரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இணையதள சேவை முடக்குவதை வாடிக்கையாகி விட்டது . மக்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு இக் குடியுரிமை சட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும் , பொது அமைதிக்காகவே 144 சட்டப்பிரிவு பயன்படுத்த வேண்டுமே ஒழிய தடுப்பு காவல் கைதுகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ளது என அவர் கூறினார்.