வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸைக் கூட வைக்க முடியாத ஏழை- எளிய மக்களிடமிருந்து, ரூ. 11 ஆயிரத்து 528 கோடியை அபராதமாக வசூலித்து, மத்திய அரசு வஞ்சித்துள்ளது.
மோடிஅரசின்பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டிபாதிப்புகள்காரணமாகவேஇந்தியாவில்தொழில்கள்நசிந்து, கோடிக்கணக்கானோர்வேலையிழப்புக்குஉள்ளானார்கள். வருவாயைஇழந்துவறுமையில்தள்ளப்பட்டார்கள்.
ஆனால், இவ்வாறுபாதிக்கப்பட்டநபர்களிடமிருந்தே- “ஏன்வங்கிக்கணக்கில்பணம்வைக்கவில்லை?” என்றுகேட்டு, சுமார் 12 ஆயிரம்கோடிரூபாயைஅபராதமாகவங்கிகள் சுருட்டியுள்ளன.

வங்கிகளில்கணக்குவைத்திருப்பவர்கள், குறிப்பிட்டதொகையைவங்கிக்கணக்கில்கட்டாயமாகவைத்திருக்கவேண்டும். அவ்வாறுவைத்திருக்காதநபர்களிடம்அபராதம்வசூலிக்க, வங்கிகள்சட்டத்தில்இடம்உள்ளது.
எனினும்குறைவானஅபராதத்தொகையேவசூலிக்கப்பட்டுவந்தது.ஆனால், மோடிஅரசுஆட்சிக்குவந்தபிறகு, கடந்த 2015-ஆம்ஆண்டுஜூலை 1-ஆம்தேதிரிசர்வ்வங்கிஒருஅறிவிப்பைவெளியிட்டது. அதில்வங்கிகள்தங்களின்விருப்பத்திற்குஏற்பஅபராதத்தொகையைநிர்ணயம்செய்துகொள்ளலாம்என்றுவங்கிகளுக்குஅனுமதிவழங்கப்பட்டது.

இதைப்பயன்படுத்தி, ஸ்டேட்பாங்க்ஆப்இந்தியாஉள்ளிட்டசிலவங்கிகள்அபராதத்தொகையைமட்டுமன்றிடெபாசிட்தொகையையும்உயர்த்தின. பெருநகரங்களில்வங்கிவாடிக்கையாளர்க்கானகுறைந்தபட்சஇருப்புத்தொகைபொதுத்துறைவங்கிகளில்ரூ. 5 ஆயிரம்வரையும், தனியார்வங்கிகளில்ரூ. 10 ஆயிரம்வரையும்உயர்த்தப்பட்டது.
பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டிபோன்றவற்றால்சிறு, குறுதொழில்கள்நசிந்து, கடுமையானவேலையிழப்பும், வருவாய்இழப்பும்ஏற்பட்டிருக்கும்போது, வங்கிக்கணக்குகளுக்கானகுறைந்தபட்சஇருப்புத்தொகையைஉயர்த்தியதுகேலிக் கூத்தானநடவடிக்கைஎன்றேகூறப்பட்டது.

ஆனால், அவற்றையெல்லாம்வங்கிகள்கவனத்தில்கொள்ளவில்லை.மாறாக, நாட்டிலுள்ள 3 தனியார்வங்கிகள்மற்றும் 21 பொதுத்துறைவங்கிகள், குறைந்தபட்சஇருப்புத்தொகையைபராமரிக்கமுடியாதவர்களிடம்அபராதம்என்றபெயரில்மட்டும்கடந்த 4 ஆண்டுகளில் 11 ஆயிரத்து 528 கோடியைசுருட்டியுள்ளன.
இதுநான்காண்டுக்கானஅபராதவசூல்என்றாலும், பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டிஅமலாக்கத்திற்குப்பின்னர்இந்தஅபராதத்தொகை 2 மடங்குஅதிகரித்துள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.2014-15ஆம்ஆண்டுரூ. 2 ஆயிரத்து 84 கோடி, 2015-16ஆம்ஆண்டு 2 ஆயிரத்து 138 கோடி, 2016-17ஆம்ஆண்டு 2 ஆயிரத்து 318 கோடிஎனஅபராதத்தொகைவசூலிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பணமதிப்புநீக்கம்மற்றும்ஜிஎஸ்டி-யின்பாதிப்புகள்வெளிப்பட்ட 2017 -18 ஒரேஆண்டில்இந்தஅபராதவசூல்ரூ. 4 ஆயிரத்து 980 கோடியாகஅதிகரித்துள்ளது.
