Asianet News TamilAsianet News Tamil

ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயற்சி.. இணையதளம் முடக்கம் எப்போது சரியாகும்? அமைச்சர் தகவல்.!

இ-பதிவு இணையதளத்தை 60 லட்சம் பேர் ஒரே நேரத்தில் அணுகியதால் இணையதளம் முடங்கியது. இன்று மாலைக்குள் இ-பதிவு இணையதளம் சரி செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Attempts to e-pass 60 lakh people at a time ... paralyzed website
Author
Tamil Nadu, First Published Jun 7, 2021, 3:07 PM IST

 இ-பதிவு இணையதளத்தை 60 லட்சம் பேர் ஒரே நேரத்தில் அணுகியதால் இணையதளம் முடங்கியது. இன்று மாலைக்குள் இ-பதிவு இணையதளம் சரி செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கு இன்று காலையுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது ஜூன் 14-ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Attempts to e-pass 60 lakh people at a time ... paralyzed website

இதன் காரணமாக எலக்ட்ரீசியன், பிளம்மர், கணினி பழுது , மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள் இ-பதிவு செய்தபின் பணிக்கு செல்லலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. இதனால், அதிகமானோர் இ - பதிவு இணையத்தில் விண்ணப்பிக்க முயன்றனர். ஆகையால், இ-பதிவு இணையதளம் முடங்கியது.

Attempts to e-pass 60 lakh people at a time ... paralyzed website

இந்நிலையில், இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில்;- ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ- பதிவு செய்ய இணைய தளத்திற்கு வந்த காரணத்தால் தான் இணையதளம் முடங்கியது. விரைவில் இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios