இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியர்கள் என கூறுவது மிகவும் கண்டனத்துக்குரியது என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதி எம்.பி கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் பேசியுள்ளார். அதற்கு கனிமொழி, ‘தனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள்’ எனக் கேட்டுள்ளார். ஆனால், அந்த அதிகாரி கனிமொழியை பார்த்து, ‘நீங்கள் இந்தியர்தானே..?’ இந்தி தெரியாதா எனக் கேட்டதாக கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


இந்த நிகழ்வுக்கு கனிமொழிக்கு ஆதரவாக பல தலைவர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் கனிமொழிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கனிமொழிக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு விமான நிலையத்திலும் இதுபோன்றுதான் நடைபெற்று வருகிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை. அப்படியென்றால், சாதாரண மக்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுவார்கள்? இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியர்கள் என கூறுவது மிகவும் கண்டனத்துக்குரியது.