கொரோனா வைரஸ் தொற்று பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் பிடித்துள்ளது. இந்தியாவில் இந்த தொற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் ஊரடங்கு மார்ச் 24ம் தேதி அறிவித்தார் பிரதமர் மோடி.இந்த ஊரடங்கு ஏபரல்14ம் தேதி வரைக்கும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

T.Balamurukan

கொரோனா வைரஸ் தொற்று பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் பிடித்துள்ளது. இந்தியாவில் இந்த தொற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் ஊரடங்கு மார்ச் 24ம் தேதி அறிவித்தார் பிரதமர் மோடி.இந்த ஊரடங்கு ஏபரல்14ம் தேதி வரைக்கும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். நாம் எடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. வீட்டின் நான்கு மூலைகளிலும் ஔியை பரப்பும் வகையில் டார்ச், அகல் விளக்கு மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என உரையாற்றினார்.ஊரடங்கை மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. சமூக இடைவெளி தான் முக்கியம் என்றார்.