திமுக, திக காரர்களுக்கு மூத்திரத்தில் ஏதோ பிரச்னையோ... ஷ்யாம் கிருஷ்ணசாமி அதிரடி..!
தமிழ்நாட்டில் இருக்கிற இந்த திமுக, திக காரனுங்க தான் என்நேரமும் கோமியம், மூத்திரம்னு அதே நினைப்பாவே இருக்கானுங்க?!
தென்தமிழகத்தில் உள்ள (தலித் மக்கள்) தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் புதிய தமிழகம் என்ற கட்சியை துவக்கி அரசியல் செய்து வருபவர் கிருஷ்ணசாமி. இவர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை கொங்கு வேளாளர்கள் என அறிவிக்க வேண்டும் என்றும், பட்டியலில் இருந்து அச்சமூகத்தை நீக்கி தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமியும் தந்தையைப் போலவே அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், அவரது ட்விட்டர் பதிவில், ’’6 மாசமா இந்துக்களின் ஆன்மீக பூமியான ரிசிகேஷ்யில் இருக்கேன்…இங்க யாரும் மாட்டு மூத்திரத்தை பொருட்படுத்தி பார்த்ததில்லை,
ஆனா தமிழ்நாட்டில் இருக்கிற இந்த திமுக, திக காரனுங்க தான் என்நேரமும் கோமியம், மூத்திரம்னு அதே நினைப்பாவே இருக்கானுங்க?!
மூத்திரத்தில் ஏதாவது பிரச்சனையோ?! எனப்பதிவிட்டு உள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.