கோவை, ராமநாதபுரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இம்சை அரசன் 23-ம் புலிகேசி போலவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்தும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. இதனால், ஒவ்வொரு கட்சியும் வியூகங்களை வகுத்துவருகின்றன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். அப்போது முதலே அவரை புரோமோட் செய்யும் வேலையை அதிமுகவினர் சமூக ஊடகங்களில் செய்துவருகின்றனர். அண்மையில் யார் தேவை என்ற பாணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புரோமோட் செய்தும் மு.க. ஸ்டாலினை கிண்டலடித்தும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இதற்குப் பதிலடியாக திமுகவினரும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இந்தப் போட்டாபோட்டியால், இந்தப் புகைப்படங்கள் பகிர்வது சமூக ஊடங்களில் இரு கட்சியினரும் நிறுத்திக்கொண்டனர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் பகிர்ந்த புகைப்படங்களை இப்போது நேரடியாக போஸ்டர்களாக ஒட்டி பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள். கோவையில் காந்திபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டலடிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.