ஆட்டம் காணும் அமமுக... கடும் அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்..!
மக்களவை தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தாய் கழகத்தில் இணைந்தனர். அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறி வருவதால் டிடிவி.தினகரன் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தாய் கழகத்தில் இணைந்தனர். அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறி வருவதால் டிடிவி.தினகரன் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தமிழத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை. பல இடங்களில் அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் கூட பெறவில்லை. இதையடுத்து அமமுக நிர்வாகிகள் அதிருப்பதியில் இருந்து வந்தனர். இந்நிலையில் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
சமீபத்தில் டிடிவி.தினகரனின் மிகவும் நம்பிக்கை உரியவராக இருந்து வந்த நெல்லை மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா மற்றும் நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் கடந்த வாரம் அதிமுகவில் இணைந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில், நெல்லை மாவட்ட புறநகர் பகுதியின் செயலாளர் பிரபாகர், இவர் முன்னாள் எம்.பி.யாக பதவி வகித்தவர். இவரது தலைமையில் தான், அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், மாணவர் அணியை சேர்ந்தவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளனர். மேலும் பல மாவட்டங்களில் இருந்தும் அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.