77 நாட்கள் கட்டாய விடுப்புக்குப் பின்  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா  நேற்று மீண்டும் பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு அவரை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. 

சி.பி.. இயக்குனர்அலோக்வர்மாவுக்கும், சிறப்புஇயக்குனர்ராகேஷ்அஸ்தானாவுக்கும்இடையேபனிப்போர்ஏற்பட்டது. இருவரும்ஒருவர்மீதுஒருவர்ஊழல்குற்றச்சாட்டுகளைகூறினர். இதனையடுத்துஅலோக்வர்மாவைகடந்தஆண்டுஅக்டோபர்மாதம் 23-ந்தேதிஇரவுமத்தியஅரசுகட்டாயவிடுப்பில்அனுப்பியது. மேலும்அவருடையஅதிகாரங்களையும்பறித்தது. இடைக்காலஇயக்குனராகநாகேஸ்வரராவையும்அரசுநியமித்தது.

கட்டாயவிடுமுறைக்குஎதிராகசுப்ரீம்கோர்ட்டில்அலோக்வர்மாவழக்குதொடர்ந்தார். வழக்கைவிசாரித்தநீதிபதிகள், அலோக்வர்மாவின்அதிகாரபறிப்புமற்றும்கட்டாயவிடுமுறைக்குகாரணமானமத்தியஅரசின்உத்தரவைரத்துசெய்தனர். மேலும்இடைக்காலஇயக்குனர்நியமனமும்ரத்துசெய்யப்பட்டது.

கோர்ட்டுஉத்தரவால்சி.பி.. இயக்குனராகஅலோக்வர்மாசெயல்படுவதில்தடைநீங்கியது. இதனையடுத்து 77 நாட்கள்கட்டாயவிடுப்பில்இருந்தஅலோக்வர்மா, நேற்றுமீண்டும்அலுவலகம்வந்துபதவிஏற்றுக்கொண்டார். இவரது 2 ஆண்டுபதவிக்காலம், வருகிற 31-ந்தேதியோடுநிறைவுபெறுவதுகுறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு இன்று மாலை கூடியது. இதில் எதிர்கட்சித் தலைவர் மல்லிகாஜுன கார்கே, நீதிபதி சிக்ரி ஆகியோர் பங்கேற்றனர். அதில் அலோக் வர்மா மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்து என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அலோக் வர்மா உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்ட ராவ் தொடர்ந்து சிபிடீ இயக்குநராக தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.