Asianet News TamilAsianet News Tamil

தென் தமிழக மக்களே உஷார்..!! அடுத்த 24 மணி நேரத்தில் வெளுத்துக்கட்டப் போகிறது என எச்சரிக்கை..!!

செப்டம்பர் 22 ஆம் தேதி கேரளா, கர்நாடகா, கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்,

alert for People of South Tamil Nadu,  Warning that it is going to rain in the next 24 hours.
Author
Chennai, First Published Sep 22, 2020, 12:55 PM IST

வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

மேலும் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தென் தமிழகம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்சும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி  செல்சியஸ்சையும் ஒட்டி பதிவாக கூடும், 

alert for People of South Tamil Nadu,  Warning that it is going to rain in the next 24 hours.

 கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி, பந்தலூர், (நீலகிரி) தலா 11 சென்டி மீட்டர் மழையும்,  சின்னக்கல்லார், (கோவை) மயிலாடி, (கன்னியாகுமரி) ஆரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 9 சென்டிமீட்டர் மழையும்,  வால்பாறை (கோவை) 8 சென்டி மீட்டர் மழையும், பெரியாறு, (தேனி) சோலையாறு தலா ஏழு சென்டி மீட்டர் மழையும், வால்பாறை, பரம்பிக்குளம் (கோவை) மேல் பவானி (நீலகிரி) தல 6 சென்டி மீட்டர் மழையும், நாகர்கோவில், தக்கலை, கொட்டாரம், கன்னியாகுமரி 5 சென்டி மீட்டர் மழையும், குழித்துறை, இரணியல், கன்னிமார்,  சூரலாக்கோடு,  பெருஞ்சாணி, சிற்றாறு, (கன்னியாகுமரி) தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.செப்டம்பர் 22 ஆம் தேதி கேரளா, கர்நாடகா, கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்,

alert for People of South Tamil Nadu,  Warning that it is going to rain in the next 24 hours.

மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், அதேபோல் செப்டம்பர் 22 குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்றுடன் 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 23ஆம் தேதி மகாராஷ்டிரா, கோவா, கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 22, 23 தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 23-9-2020  இரவு 11:30 மணி வரைர, கடல் உயர் அலை 3.3 மீட்டர் முதல் 3.7 மீட்டர் வரை எழும்பக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios