Asianet News TamilAsianet News Tamil

ஓ.பி.எஸ் போட்ட உத்தரவு... ஹெச்.ராஜாவால் அதிமுக எம்.பிக்கு நேர்ந்த சோகம்..!

சீட் கிடைக்காத அதிமுக எம்.பி.,க்களும் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளதால் விரக்தியில் உள்ளனர்.
 

AIADMK M P triggered by H Raja
Author
Tamil Nadu, First Published Apr 4, 2019, 5:00 PM IST

சீட் கிடைக்காத அதிமுக எம்.பி.,க்களும் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளதால் விரக்தியில் உள்ளனர்.

AIADMK M P triggered by H Raja

அதிமுகவில் எம்.பியாக உள்ள பலருக்கும் சீட் கிடைக்கவில்லை. இதனால் தலைமைக்கு எதிராக அதிருப்தியாக இருந்து வருகின்றனர்.
இதனை உணர்ந்து கொண்ட கட்சித்தலைமை ஓ.பி.எஸை விட்டு சமாதானப்படுத்த முயற்சித்துள்ளது. அவர்களை அணுகிய ஓ.பி.எஸ் ‘‘எம்பி சீட் கிடைக்காதவர்கள் விரக்தி அடைய வேண்டாம். அவர்களுக்கு உரிய மரியாதை செய்யப்படும்’ எனக் கூறியிருக்கிறார். அதே நேரம் சீட் கிடைக்காத சிட்டிங் எம்பிக்கள் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் கூடவே பிரசாரத்துக்கு செல்ல வேண்டும். AIADMK M P triggered by H Raja

இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மறைமுகமாகவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தான் பிரசாரம் செய்த தொகுதியில் இன்னொருத்தருக்காக பிரசாரம் செய்ய வேண்டியிருக்கே என சிட்டிங் எம்பிக்களான அன்வர்ராஜா, செந்தில்நாதன்  புலம்பி வருகிறார்கள். இதில் செந்தில்நாதன் வலிக்காத மாதிரியே நடிக்கிறாராம். ‘எம்பி தேர்தல் போனால் போகட்டும். பிரச்னை இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் சீட்டு கேட்டு வாங்கி வெற்றிபெற்று அமைச்சராவேன் என சோகத்திலும் சுயபுராணத்தை அள்ளிவிட்டு வருகிறார். AIADMK M P triggered by H Raja

ராமநாதபுரத்தில் அன்வர் ராஜா கடந்த முறை எம்.பியானார். அந்தத் தொகுதியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்ததால் அங்கு நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். சிவகங்கை தொகுதியில் கடந்த முறை செந்தில்நாதன் போட்டியிட்டு வென்றார். அந்தத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியது அதிமுக. அங்கு பாஜக வேட்பாளராக ஹெச்.ராஜா போட்டியிட இருக்கிறார். சிவகங்கை தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கக்கூடாது என செந்தில்நாதன் பல குட்டிக்கரணங்களை அடித்துப் பார்த்தும் முடியாததால் சட்டமன்றத் தேர்தலில் சீட் பெற இப்போதே துண்டை போட்டு வைத்துக் காத்திருக்கிறார் செந்தில்நாதன். அவரது இந்த நிலைமைக்கு காரணம் ஹெ.ராஜா தான் என செந்தில்நாதனின் ஆதரவாளர்கள் சோக கீதம் பாடி வருகின்றனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios