AIADMK GC Meeting Live Updates: ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு.. வாகனம் பஞ்சர்.!
சுருக்கம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த 10 நாட்களாக சூறாவளியாக சுழன்றடித்த நிலையில், அதை இறுதி செய்யும் கிளைமாக்ஸ் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இரட்டைத் தலைமையை வலியுறுத்தும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு இல்லாமல் போகவே, கடைசி வாய்ப்பாக பொதுக்குழுவை நடத்தவிடாமல் முஸ்தீபுகளை மேற்கொண்டார்.
01:05 PM (IST) Jun 23
மாலை அணிவித்த தொண்டர்.. தட்டிவிட்ட இபிஎஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவிக்க முயன்ற போது இருங்கங்கப்பா... இருங்கங்க...என்னங்க போங்க....சும்மா என கோபடைந்தார். இதனால் அணிவிக்க வந்த மாலையை இபிஎஸ் ஆதரவாளர்கள் மாலையை அணிவிக்காமல் கொண்டு சென்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் பரப்புரை வாகனத்தை பஞ்சர் செய்த இபிஎஸ் ஆதரவாளர்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்த பரப்புரை வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
12:55 PM (IST) Jun 23
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்.. கே.பி.முனுசாமி
ஜூலை 11ம் தேததி நடக்கவிருக்கும் அடுத்தத பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
12:27 PM (IST) Jun 23
கட்சி அழிப்பாதைக்கு செல்கிறது.. புதிய பொதுக்குழு தேதி அறிவிப்பு செல்லாது... வைத்தியலிங்கம்
ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது செல்லாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். அதிமுகவை அழிவுப்பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்வதாக வைத்தியலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்ட வெளியேறிய போது ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12:15 PM (IST) Jun 23
பொதுக்குழுவை புறக்கணித்து ஓபிஎஸ் வெளிநடப்பு
சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்ட வைத்திலிங்கம், அதனை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.
12:12 PM (IST) Jun 23
ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம்
ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
12:10 PM (IST) Jun 23
இரட்டை தலைமையை ரத்து செய்துவிட்டு ஒற்றை தலைமை வேண்டும்.. சி.வி.சண்முகம்
ஆளும் திமுக அரசின் மக்கள் விரோத போக்குகளை அதிமுகவின் இரட்டை தலைமையில் எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் இரட்டை தலைமையை ரத்து செய்துவிட்டு ஒற்றை தலைமை தொடர்பாக விவாதிக்க வேண்டும். இந்த பொதுக்குழுவிலேயே அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியையும் அறிவிக்க வேண்டும் என அவைத் தலைவருக்கு சி.வி.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
12:00 PM (IST) Jun 23
அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்வு
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
11:54 AM (IST) Jun 23
அதிமுக வரலாற்றில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது இதுவே முதல்முறை
அதிமுக வரலாற்றில் பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
11:50 AM (IST) Jun 23
அனைத்து தீர்மானங்களும் அதிமுக பொதுக்குழுவில் நிராகரிப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கொண்டு வந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக கே.பி.முனுசாமி தெரிவிதத்துள்ளார். பொதுக்குழுவின் ஒட்டுமொத்த கோரிக்கையும் ஒற்றைத் தலைமை மட்டுமே என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
11:41 AM (IST) Jun 23
ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ மலர் கொத்து வரவேற்ற அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்
ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக உறுப்பினர்கள் கோஷமிடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ மலர் கொத்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வரவேற்றார்.
11:36 AM (IST) Jun 23
பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து மட்டுமே விவாதம்?
உயர்நீதிமன்றம் புதிய தீர்மானங்களை கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்ட நிலையில் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாது என்றும் ஒற்றைத் தலைமை குறித்தத விவாதம் மட்டுமே நடைபெறும் என கூறப்படுகிறது.
11:32 AM (IST) Jun 23
பவுன்சர்கள் பாதுகாப்பில் எடப்பாடியார்.. பொதுக்குழு அரங்கிற்குள் உற்சாக வரவேற்பு
பொதுக்குழு அரங்கிற்குள் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர். சுமார் 100 பவுன்சர்கள் பாதுகாப்பு வளையத்தில் எடப்பாடியார் உள்ளார். போலீசார் மற்றும் பவுன்சர்கள் புடைசூழ பொதுக்குழு அரங்கிற்குள் இபிஎஸ் நுழைந்தார்.
பொதுக்குழுவில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்களை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கோரிக்கை வைத்தார். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வளர்மதி பேசினார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு வந்த பன்னீர்செல்வத்தைத வாயிலில் அமர்ந்திருந்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி வரவேற்கவில்லை.
10:56 AM (IST) Jun 23
வைத்தியலிங்கத்தை எதிர்த்து குரல்கள் எழுந்ததால், மேடையில் இருந்து இறங்கினார்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பொதுக்குழுவிற்கு வந்த போது அவருக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து வைத்தியலிங்கத்தை எதிர்த்து குரல்கள் எழுந்ததால், மேடையில் இருந்து இறங்கினார்.
10:50 AM (IST) Jun 23
விண்ணை முட்டும் ஒற்றை தலைமை கோஷம்... பொதுக்குழுவில் ஓபிஎஸ்.க்கு எதிர்ப்பு
பொதுக்குழு நடைபெறும் அரங்கிற்குள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்த உடன் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். ஓபிஎஸ் கூட்ட அரங்கிற்குள் நுழைந்த போது பெரும்பாலான தொண்டர்கள் எழுந்து நின்று வரவேற்பு தரவில்லை. மேலும், ஓபிஎஸ் அரங்கிற்குள் வந்த போது வேண்டும் வேண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என இபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து முழமிக்கப்பட்டனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி முதலில் புறப்பட்டார். ஆனால், அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார். அவரது பின்னால், கிளம்பிய ஓபிஎஸ் மாற்று வழியில் வந்து முதல் ஆளாக மண்டபத்திற்குள் நுழைந்தார்.