Asianet News TamilAsianet News Tamil

மறுபடியும் கணக்குல தப்பா.? கொரோனாவுக்கு பலியானவர்கள் பட்டியலில் குழறுபடி.! அம்பலபடுத்தும் RTI Act

நெல்லையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் 103 பேர் விடுபட்டுள்ளதாக தகவல் பெரும் உரிமைச்சட்டத்தின் கீழ் வெளிவந்திருக்கும் தகவல்கள் தமிழக சுகாதராத்துறை மீண்டும் ஓர்  சிக்கலில் சிக்கியிருக்கிறது.

Again the accounting tappa.? Mess with Corona Victims List! Exposing RTI Act
Author
Thirunelveli, First Published Sep 5, 2020, 10:49 PM IST


நெல்லையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் 103 பேர் விடுபட்டுள்ளதாக தகவல் பெரும் உரிமைச்சட்டத்தின் கீழ் வெளிவந்திருக்கும் தகவல்கள் தமிழக சுகாதராத்துறை மீண்டும் ஓர் சிக்கலில் சிக்கியிருக்கிறது.

Again the accounting tappa.? Mess with Corona Victims List! Exposing RTI Act

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், பலியானவர்களின் எண்ணிக்கையையும் தினமும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பின்படி நெல்லை மாவட்டத்தில் இதுவரை 182 பேர் கொரோனாவால் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எத்தனை பேர்? என்ற கேள்விக்கு 255 பேர் என பதில் வந்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் 103 பேர் விடுபட்டு உள்ளதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதார துறை விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் இருந்து கோரிக்கை வைக்க எழுந்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios