Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் அல்வா கிண்டிய பொன்னார்! சென்னையில் பொன்னாரை கிண்டும் அ.தி.மு.க.: கிண்டலுக்கு பின்னே நிற்பது கரூர் துரையா?

பி.ஜே.பி.யையும், அ.திமு.க.வையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் வெச்சு செய்த காலம் மலையேறிவிட்டது. இப்போது பி.ஜே.பி.யை அ.தி.மு.க.வினர் மீம்ஸ் போட்டு சீண்டுவதுதான் லேட்ட்ஸ்ட் டிரெண்டிங். 
 

admk started to irritate bjp by creating meems just read out the reality
Author
Chennai, First Published Jan 25, 2019, 7:44 PM IST

டெல்லியில் அல்வா கிண்டிய பொன்னார்! சென்னையில் பொன்னாரை கிண்டும் அ.தி.மு.க.: கிண்டலுக்கு பின்னே நிற்பது கரூர் துரையா?

பி.ஜே.பி.யையும், அ.திமு.க.வையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் வெச்சு செய்த காலம் மலையேறிவிட்டது. இப்போது பி.ஜே.பி.யை அ.தி.மு.க.வினர் மீம்ஸ் போட்டு சீண்டுவதுதான் லேட்ட்ஸ்ட் டிரெண்டிங். அந்த வகையில் இப்போது டெல்லியில் அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அல்வா கிண்டியதை வைத்து அவரை கிண்டலோ கிண்டல் செய்து காலி பண்ணிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க.வின் சோஷியல் மீடியா வெறி டீம் ஒன்று. 

admk started to irritate bjp by creating meems just read out the reality

அதெல்லாம் சரி, பொன்னார் எதுக்கு டெல்லியில் அல்வா கிண்டினார்?

இதற்கு விடை சொல்லும் பாராளுமன்ற ஊழியர்கள்...”அடுத்த மாச இறுதியில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்குது. பட்ஜெட் அறிக்கை பணி துவங்குறப்ப, மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரிப்பது வழக்கம். பட்ஜெட் பணி முடியும் வரை அங்கிருக்கும் அச்சகத்தில் தங்கியிருக்கும் ஊழியர்களை குஷிப்படுத்தவே இந்த அல்வா. பொதுவாக அல்வா கிண்டுவதை நிதியமைச்சர் துவக்குவாராம். ஆனால் அருண் ஜெட்லி சிகிச்சையில் இருப்பதால் இணையமைச்சர்களான பொன். ராதாகிருஷ்ணனும், சிவபிரதாப் சுக்லாவும்  அல்வாவை கிண்டி கலகலப்பாக்கிவிட்டார்களாம்.  அல்வாவை சுவைத்துப் பார்த்த ஊழியர்கள் ‘ஜி ஹல்வா பகூத் டேஸ்ட்டி’ என்று பொன்னாரை கொண்டாடிவிட்டார்கள். 

admk started to irritate bjp by creating meems just read out the reality

இதற்கிடையில் இந்த விஷயம் தமிழகத்தில் பரவ,  கடந்த சில நாட்களாக பி.ஜே.பி.யை உரசி முறைத்துக் கொண்டிருக்கிற அ.தி.மு.க. கூட்டத்துக்கு இந்த தகவல் பெரிய சைஸ் அண்டா நிறைய அல்வா கிடைத்தது போல் ஆகிவிட்டது. மீம்ஸ், ஸ்டேட்டஸ் என்று போட்டு பொன்னாரை கிண்டிக் கவுத்திக் கொண்டிருக்கிறார்கள். 
இது பி.ஜே.பி.யினரின் கவனத்துகுப் போக, “தி.மு.க.காரங்க பண்ணினாலும் கூட கண்டுக்காம விட்டுடலாம், ஆனா இந்த அ.தி.மு.க.வுக்குள்ள இருந்தே சிலர் இந்த சில்மிஷத்தை பண்றதைதான் மன்னிக்க முடியாது. எல்லாம் கரூர்காரர் வேலையாகத்தான் இருக்கும்.” என்று பொங்குகிறார்களாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios