அதிமுகவின் 4வது நாள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதிமுக பொது செயலாளர் சசிகலா, முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்பன போன்ற கட்சி பணிகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை சசிகலா நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

கட்சியின் பணிகள் குறித்தும், நிர்வாகம் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.