“11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் இதை பொறுத்துக் கொள்ளாத அரசு, உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க செய்வதாக’ குற்றம்சாட்டினர். மேலும், ‘இந்த விசாரணையை எதிர்கொள்ள தயார்’ என்றும் திமுக தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தார்கள்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விடாமல் துரத்தி வரும் திமுகவுக்கு பதிலடி தரும் வகையில், 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் வழக்கு விசாரணையை விரைந்து விசாரிக்க ஆளுங்கட்சி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

தமிழ் நாட்டில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் சட்டப்பேரவையில் குட்கா பாக்கெட்டுகளை காட்டி திமுக எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர், காவல் துறை அதிகாரிகள் மீதும் திமுக எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறினார். இந்நிலையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்ததாக மு.க. ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையீடு செய்தார். அப்போது அங்கே ஆஜரான திமுக மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மற்றும் என்.ஆர் இளங்கோ ஆகியோர் , “11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் இதை பொறுத்துக் கொள்ளாத அரசு, உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க செய்வதாக’ குற்றம்சாட்டினர். மேலும், ‘இந்த விசாரணையை எதிர்கொள்ள தயார்’ என்றும் திமுக தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தார்கள்.
இதையடுத்து இந்த வழக்கை ஆகஸ்ட் 13 அன்று விசாரிப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.
