அன்பு மகனுக்காக காத்திருக்கும் ஷாருக்கான்... ஜாமீனுக்கு பிறகும் தொடரும் சிறை.. ஆர்யன் கான் விடுதலை எப்போது.?
ஷாரூக்கான் குடும்பத்தினரும் அன்பு மகனை வரவேற்பதற்காகக் காத்திருந்தனர். ஆர்யன்கான் இன்று மாலைக்கு மேல் விடுதலை ஆவார் என்று ஊடகத்தினரும் ஷாருக்கான் ரசிகர்களும் சிறைச்சாலை வாசலில் குவிந்திருந்தனர்.
போதை பொருள் வழக்கில் ஜாமீன் பெற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நாளைதான் விடுவிக்கப்படுவார் என்று மும்பை சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 3 அன்று மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு நடந்த பாட்டியில் போதை பொருள் பயன்பாடு இருப்பதை போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பார்ட்டியில் பங்கேற்றவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து பார்ட்டியில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனையத்து அவரிடம் நடந்த தீவிர விசாரணைக்குப் பிறகு ஆர்யன் கானை நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தி, மும்பை ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் அடைத்தனர். ஆர்யன் கான் தரப்பில் ஜாமீன் கேட்டு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஆர்யன் கான் உள்பட 8 பேருடைய ஜாமீன் மனுக்கள் இருமுறை தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இரு நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. வழக்கமாக, இதுபோன்ற வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலை ஆக வேண்டும் என்றால், அதற்கு முன்பாக சில சம்பிரதாயங்களைச் செய்ய வேண்டும். அதற்கு ஜாமீன் உத்தரவின் நகலை சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இந்த சிறப்பு நீதிமன்றம் ஆர்யன் கான் செலுத்த வேண்டிய ஜாமீன் தொகையையும் உள்ளடக்கிய 'விடுதலை ஆணையை' வெளியிடும். இந்த 'விடுதலை உத்தரவு' ஆர்தர் ரோடு சிறைக்கு வெளியே உள்ள 'ஜாமீன் பெட்டி'க்கு கொண்டு செல்லப்படும். இந்தச் சம்பிரதயாங்கள் முடிந்து ஜாமீனில் விடுதலை ஆக வேண்டுமென்றால், மாலைக்குள் நடக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
இதற்கிடையே இந்த வழக்கில் ஜாமீன் வெற்ற ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கான நிபந்தனைகளை நீதிமன்றம்தான் இன்றுதான் உத்தரவாகப் பிறப்பித்தது. எனவே, இன்று மாலைக்குள் ஆர்யன் கான் விடுதலை அவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஷாரூக்கான் குடும்பத்தினரும் அன்பு மகனை வரவேற்பதற்காகக் காத்திருந்தனர். ஆர்யன்கான் இன்று மாலைக்கு மேல் விடுதலை ஆவார் என்று ஊடகத்தினரும் ஷாருக்கான் ரசிகர்களும் சிறைச்சாலை வாசலில் குவிந்திருந்தனர். ஆனால், ஆர்யன் கான் இன்று விடுதலை செய்யப்பட மாட்டார் என்றும் நாளைதான் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஆர்தர் ரோடு சிறைச்சாலை அதிகாரிகள் அதிரடியாகத் தெரிவித்தனர். இதனால் ஷாருக்கான் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.