Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் நடக்கப்போகும் அதிரடி..!! கடலில் நள்ளிரவில் நடக்கப் போகும் பயங்கரம்.

அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55  கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்  இரவு 11.30  மணி வரை  கடல் உயர் 2.6 முதல் 3..4 மீட்டர் வரை எழும்பக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Action to be held in 5 districts in the next 24 hours .. !! The horror of going to sea at midnight.
Author
Chennai, First Published Sep 4, 2020, 2:06 PM IST

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மாவட்ட ங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும்,  கடலோர மாவட்டங்கள்,  புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். எனவும், 

அடுத்த 24 மணி நேரத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் ,அடுத்த 48 (05.09.2020) மணி நேரத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய  கன மழையும் பெய்யக்கூடும். எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். 

Action to be held in 5 districts in the next 24 hours .. !! The horror of going to sea at midnight.

என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மஞ்சளாறு (தேனி) 11, சென்டி மீட்டர் மழையும், பெரியகுளம் வட்டாச்சியர் அலுவலகம் (தேனி ) 10 சென்டி மீட்டர் மழையும், தல்லாகுளம்  (மதுரை) 9 சென்டி மீட்டர் மழையும், பெரியகுளம்  (தேனி), பிளவக்கல் அனை (விருதுநகர்) தலா 8 சென்டி மீட்டர் மழையும், மேட்டூர் (சேலம்),மடத்துக்குளம் (திருப்பூர்), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) தலா 6 சென்டி மீட்டர் மழையும், ஓட்டன்சத்திரம்  (திண்டுக்கல்), அரண்மனைப்புதூர் (தேனி) மூங்கில்துறைப்பட்டு(கள்ளக்குறிச்சி), வீரபாண்டி (தேனி ) தலா 5சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. செப்டம்பர் 04 ஆம் தேதியில் தென் கிழக்கு,மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 05,06 தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55  கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும், மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்,

Action to be held in 5 districts in the next 24 hours .. !! The horror of going to sea at midnight.

கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி  காற்று 45-55 கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 06 ஆம் தேதி வாக்கில் குமரிக் கடல்,மன்னார் வளைகுடா,லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 04 முதல்  செப்டம்பர் 08 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டா மென அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல் தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 03.09.2020  இரவு 11.30 மணி வரை கடல் உயர் 2.6 முதல் 3..4 மீட்டர் வரை எழும்பக்கூடும். என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios