நிலச்சரிவில் சிக்கவிருந்த  குடும்பத்தைக் காப்பாற்றிய நாய் !!  கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம் !!

கடந்த மே மாத இறுதியில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் கடந்த சில நாட்களாக வரலாறுகாணாதஅளவுக்கு கனமழை கொட்டி வருகிறது. இதனால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடுஉள்ளிட்ட 10 மாவட்டங்களில்உள்ள ஆறுகளில்வெள்ளம்பெருக்கெடுத்துஓடுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மாநிலம்முழுவதும் 60 ஆயிரத்துக்கும்அதிகமானோர் 1,750 தற்காலிகநிவாரணமுகாம்களில்தங்கவைக்கப்பட்டுஉள்ளனர்.இங்குதஞ்சம்அடைபவர்களின்எண்ணிக்கைஅதிகரித்துவருவதால்கூடுதல்முகாம்கள்திறக்கதிட்டமிடப்பட்டுஉள்ளது.

மழை, வெள்ளம்மற்றும்மண்சரிவால்மாநிலம்முழுவதும்இதுவரை 37 பேர்பலியாகிஉள்ளனர். 1,500 வீடுகள்பலத்தசேதம்அடைந்தன. இதில் 101 வீடுகள்முழுவதுமாகஇடிந்துவிழுந்தன.வயநாடுமாவட்டத்தில்உள்ளமனந்தவாடி, விதிரிஆகியமலைநகரங்களுக்குசெல்லும்சாலைகள்வெள்ளத்தில்அடித்துச்செல்லப்பட்டதால்இந்தசிறுநகரங்கள்உடனானஅனைத்துதொடர்புகளும்துண்டிக்கப்பட்டது.

ஆசியவிலேயே மிகப் பெரிய அணையான இடுக்கிஅணையில்நீர்மட்டம்உயர்ந்துகொண்டேவருவதால்அதன்துணைஅணையானசெருதோணிஅணையில்உள்ள 5 மதகுகளும் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களை அங்கிருந்து வெளியேறும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது.

இந்நிலையில் இடுக்கி மாவட்டம் கஞ்சிக்குழி என்ற கிராமத்தில் மோகனன்என்பவர்தனதுகுடும்பத்தாருடன்வீட்டில்தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை  3 மணிஅளவில்அவரது வளர்ப்பு நாள் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.

ஆனால் நாய் வழக்கம் போல் குரைத்துக் கொண்டிருப்பதாக நினைத்த மோகனன், திரும்பவும் தூங்கியுள்ளார். ஆனால் தொடர்ந்து நாய் ஆக்ரோஷமாக ஊளையிட்டதால் வீட்டுக்குள்ளிருந்து வெளியே எழுந்து சென்று பார்த்தபோது, அந்த வீட்டின் அருகே நிலச்சரிவு ஏற்படுவதைப் பார்த்த மோகனன் உடனயாக வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மகளை வீட்டை விட்டு வெளியேறினார்.

அதே நேரத்தில் அந்த வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த தனது தாத்தா, பாட்டியை வெளியேற்ற முயன்றபோது நிலச்சரிவு ஏற்பட்டு அந்த வீடு மண்ணுக்குள் புதைந்து விட்டது. இதில் அந்த தாத்தா, பாட்டி மரணமடைந்தனர்.

ஏற்கனவே மோகனனின் வீடு பெரியார்அணையைஒட்டிஉள்ளஇடத்தில்இருந்ததால்அவர்களை அதிகாரிகள்வெளியேறகூறியுள்ளனர். .இதைஅடுத்துஒருகிலோமீட்டர்தொலைவில்உள்ளஇந்தவீட்டிற்குவாடகைக்குகுடிவந்துள்ளார். தற்போது அந்த வீடும் நிலச்சரிவில் சிக்கி புதையுண்டுபோனது.

ஆனாலும் தற்போது இந்த பெரும் விபத்தில் இருந்து தங்கள் வீட்டு நாய் அவர்களை காப்பாற்றியுள்ளதை நன்றிப் பெருக்குடன் அனைவரிடமும் நெகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்.