Asianet News TamilAsianet News Tamil

17 வயது தங்கையை காதலித்து கர்ப்பமாக்கிய அண்ணன்... கண்டித்தும் கடுக்கடங்காமல் உல்லாசம்..!

அண்ணன் உறவுமுறை கொண்டவனுடன் நெருங்கிப்பழகி கர்ப்பமடைந்த சிறுமிக்கு, கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

A brother who fell in love with a 17-year-old sister
Author
Tamil Nadu, First Published Jun 4, 2020, 12:45 PM IST

அண்ணன் உறவுமுறை கொண்டவனுடன் நெருங்கிப்பழகி கர்ப்பமடைந்த சிறுமிக்கு, கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

கன்னியாகுமரி மாவட்டம், பரசேரி அடுத்த மணக்கரை என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, குளச்சல் மகளிர் காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த போலீசார் சிறுமியையும், அவரது அம்மாவையும் விசாரித்துள்ளனர்.A brother who fell in love with a 17-year-old sister

இதில், அந்த சிறுமி அவர்களது பக்கத்து வீட்டில் இருந்த அண்ணன் உறவு முறையான சஞ்சீவி என்ற 19 வயதான இளைஞருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆர்ட்ஸ் காலேஜில் 2-ம் வருடம் படித்து வருகிறார்.. கடந்த ஜனவரி மாதத்தில் ஒருநாள், உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன்.. யார் எதிர்த்தாலும் சரி, உன்னையே கல்யாணம் செய்வேன்” என்று சொல்லியே சிறுமியை வலையில் வீழ்த்தி உள்ளார்.

அந்த பேச்சில் மயங்கிய சிறுமியும் இளைஞரை விரும்ப ஆரம்பித்து ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்று, பலமுறை இருவரும் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, அவர்கள் இருவரையும் அழைத்து கூப்பிட்டு கண்டித்து உறவுமுறையை எடுத்து சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.A brother who fell in love with a 17-year-old sister

ஆனாலும் இருவரும் திருட்டு தனமாக பழகி வந்துள்ளனர். பலமுறை வீட்டில் ஆள் இல்லாத சமயங்களில் சஞ்ஜீவ்வை வீட்டுக்கு அழைத்துள்ளார் சிறுமி. இறுதியில்தான் மகள் கர்ப்பம் என்று பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து கருக்கலைப்பு செய்வதற்காக பரசேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அங்கு கருக்கலைப்பு செய்ய முடியாது அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதையடுத்து, சிறுமியின் கரப்பத்திற்கு காரணமான சஞ்ஜீவை போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து, சிறுமியின் தாயாரிடம் தொடர் விசாரணை நடந்த வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios