5 முக்கிய ஐஏஸ் அதிகாரிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பணியிடம் மாற்றம் செய்துள்ளார்.

சென்னை: 5 முக்கிய ஐஏஸ் அதிகாரிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பணியிடம் மாற்றம் செய்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: கலை, கலாசாரத்துறை ஆணையர் கலையரசி பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்பு செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஈரோடு துணை ஆட்சியர் ப்ரதிக் தயாள், அரசு நிதித்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரிய கூடுதல் மேலாண் இயக்குநராக பிரதீப் குமார், ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியராக மதுபாலன் ஆகியோர் மாற்றப்பட்டு உள்ளனர். பத்மநாபுரம் துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் சென்னை பெருநகர மாநகராட்சி வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பணியமர்த்தப்பட்டு உள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற பிரிவின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகருக்கு அரசு சிறப்பு திட்ட செயலாக்கதுறைய இணை செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது என்று அவரது அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.