Asianet News TamilAsianet News Tamil

பொய் சொல்லி பாஸ் வாங்கி சென்றவர்கள்... 35 பேர் கொரோனா வார்டில் அனுமதி..!! தூத்துக்குடியில் பரபரப்பு..!!

அதேபோல் சென்னை தாம்பரத்தை சேர்ந்த 8 பேர் தங்களது சொந்த ஊரான எட்டயபுரத்தில்  உறவினர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் அவரை உடனே போய் பார்க்க வேண்டும் என கூறி அன்றிரவு காரில் புறப்பட்டுச் சென்றனர் ,

35 peoples admitted in corona ward who get pass fake cause
Author
Chennai, First Published May 2, 2020, 6:38 PM IST

நாளை மறுநாள்  திருமணம் நடக்க இருந்த நிலையில் சென்னையிலிருந்து சென்ற மணமக்கள் உட்பட   35 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவம் தூத்துக்குடியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  நேற்று ஒரே நாளில்  203 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால்  மாநிலத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது ,  இது தமிழகத்தின் அதிக பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது , கொரோனா பாதிப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழகம் சிவப்பு மண்டலம் ஆரஞ்சு மண்டலம் பச்சை மண்டலம் என மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது . மொத்தம் 12 மாவட்டங்கள் சிவப்புநிற மண்டலமாகவும் ,  24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது . 

35 peoples admitted in corona ward who get pass fake cause

இதில் சென்னை மதுரை நாமக்கல் தஞ்சாவூர் செங்கல்பட்டு திருவள்ளூர் திருப்பூர் ராணிப்பேட்டை விருதுநகர் திருவாரூர் வேலூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் சிவப்புநிற மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன ,  இதில் தென்காசி நாகப்பட்டினம் திண்டுக்கல் விழுப்புரம் கோயம்புத்தூர் கடலூர் சேலம் கரூர் தூத்துக்குடி திருச்சி கன்னியாகுமரி திருவண்ணாமலை உள்ளிட்ட 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன ,  இந்நிலையில்  மாநிலத்திலேயே கொரோனாவில் அதிகம் பாதித்த பகுதியாக சென்னை உள்ளது இங்கு மட்டும் சுமார் 1,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .   இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பகுதியை சேர்ந்த சிலர் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர் ,  இவர்களின் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சொந்த ஊரான எட்டயபுரத்தில் நாளை மறுதினம் அதாவது வரும் திங்கட்கிழமை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது .  

35 peoples admitted in corona ward who get pass fake cause

இதைத்தொடர்ந்து மணமக்கள் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 27 பேர் சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று ஒரு வேன் மற்றும் காரில் நேற்று முன்தினம்  இரவில் எட்டயபுரம் புறப்பட்டனர் ,  அதேபோல் சென்னை தாம்பரத்தை சேர்ந்த 8 பேர் தங்களது சொந்த ஊரான எட்டயபுரத்தில்  உறவினர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் அவரை உடனே போய் பார்க்க வேண்டும் என கூறி அன்றிரவு காரில் புறப்பட்டுச் சென்றனர் ,  இந்நிலையில் நேற்று காலையில் சென்னையில் இருந்த சென்ற  ஒரு வேன் இரண்டு காரில் வந்தவர்களை எட்டையபுரம் சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தியதுடன் அவர்கள் குறித்து  மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர் .  இதையடுத்து அந்த வாகனங்களில் இருந்த மணமக்கள் உள்ளிட்ட 35  பேரும் எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர் அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios