Asianet News TamilAsianet News Tamil

பாட்சாவாக மாற நினைத்த அண்ணாமலைக்கு ஆப்பு... கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு..!

பிரசாரத்தின் போது திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டும் விதமாக பேசிய அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

3 cases registered against bjp candidate annamalai
Author
Karur, First Published Apr 2, 2021, 4:13 PM IST

 பிரசாரத்தின் போது திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டும் விதமாக பேசிய அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் ஐ.பி.எஸ். முன்னாள் அதிகாரி அண்ணாமலையும் திமுக சார்பில் இளங்கோவும் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தின் போது;- அரசியலுக்கு வந்த பிறகு அமைதியா இருக்கணும்னு நினைக்கிறேன். இந்த செந்தில் பாலாஜியை எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும். உன்ன மாதிரி எவ்வளவு பெரிய ஃபிராடுகளை எல்லாம் பார்த்துட்டு வந்திருக்கேன் நான் என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோவும் வைரலானது. 

3 cases registered against bjp candidate annamalai

இதற்கு திமுக எம்.பி.கனிமொழி பதிலடி கொடுத்தார். செந்தில் பாலாஜியை நான் தாக்கிவிடுவேன் என்கிறார். நீ தொட்டுப் பார் தம்பி. திமுகவினர் மீது கை வைத்துப் பார். உங்களைப் போன்று எத்தனை பேரை பார்த்துவிட்டு வந்திருக்கிறோம். பெரியார் காலத்திலிருந்து எத்தனையோ அடிகள், எத்தனையோ ஏச்சுகள், எத்தனையோ மிரட்டல்களை எல்லாவற்றையும் ஊதித் தள்ளிவிட்டுதான் இந்தக் கட்சி இங்கு நின்று கொண்டிருக்கிறது என்றார். 

3 cases registered against bjp candidate annamalai

இந்நிலையில், கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios