சென்னை நெற்குன்றத்தில் பள்ளி மாணவியை  கர்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த 40 வயது மதிக்க பெண். 

சென்னை நெற்குன்றத்தில் பள்ளி மாணவியை கர்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த 40 வயது மதிக்க பெண். இவரது 16 வயது மகள் அதே பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனக்கு உடல் நிலை சரியில்லை அந்த மாணவி தன் தாயாரிடம் கூறியதால் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அங்கு சிறுமிக்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி தற்போது 8 மாதம் கர்பமாக இருப்பதாக கூறியதை அடுத்து தாயார் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் வீட்டிற்க்கு அழைத்து வந்து சிறுமியை விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த மாரிஸ்வரன்(22) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பலமுறை பாலியல் பலத்காரம் செய்து வந்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

இது தொடர்பாக சிறுமியின் தாயார் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மாரிஸ்வரன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் பலத்காரம் செய்து வந்ததை மாரீஸ்வரன் ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட மாரிஸ்வரன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் மாரீஸ்வரனை சிறையில் அடைத்தனர்.