4 மணிக்கு...! பக்கா திட்டத்துடன் "20 MLA க்கள்"...நடக்கப்போகும் சுவாரஸ்யமான சம்பவம் இதுதான் ..!
4 மணிக்கு...! பக்கா திட்டத்துடன் 20 MLA க்கள்...நடக்கபோகும் சுவாரஸயமான சம்பவம் இதுதான் ..!
பரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மாலை கர்னாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலையில் உள்ளது பாஜக.
காங்கிரஸ் மற்றும் பாஜக இதில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற ஆவல் எழுந்துள்ளது
இன்று காலை முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு இரண்டு பேராக பதவியை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தான் இன்று மாலை நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எடியூரப்பா கொண்டு வந்து உரையாற்ற உள்ளார். அந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் கட்சிகள் உரையாற்றும்.
சட்டமன்ற அமளி
இந்த நிலையில் தான் சட்டமன்ற அமளி ஏற்படும். இந்த தருணத்தை சரியாக பயன்படுத்தி, எடியூரப்பாவுக்கு ஆதரவாக அவர் சார்ந்த சமூகமான லிங்காய உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செல்ல திட்டமிட்டு உள்ளதாக திட்டம் போட்டு உள்ளனர்
குறைவான வாக்குகள்
லிங்காய சமூகத்தினர் அதிகாமாக உள்ள பகுதிகளில் காங்கிரசுக்கு குறைவான வாக்குகளே கிடைத்து உள்ளது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் கணிச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், எடியூரப்பாவை லிங்காய பிரிவின் தலைவராகவே இப்போதும் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
எடியூரப்பா என்ன சொல்கிறார் தெரியுமா..?
மக்கள் தீர்ப்பின் படியும், மனசாட்சிபடியும் எனக்கு ஆதராவாக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓட்டளிக்க வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்
இதன் அர்த்தம் என்ன வென்றால், தன் சமூதாய உறுப்பினர்களுக்கு விடுத்த மறைமுக அன்பு வேண்டுகோளாக பார்க்கப்படுகிறது
மேலும், 78 இடங்களை பெற்ற காங்கிரஸ், 38 இடங்களை பெற்ற மஜத விடம் ஆதரவை கோராமல், அதற்கு பதிலாக குமாரசாமியை முதல்வராக்க கூட ஓகே சொல்லி வழிய சென்ற சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மீது சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது
எனவே,காங்கிரஸ் மற்றும் மஜாதா கட்சியில் உள்ள லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எம் எல்ஏக்கள் 20 பேர் உள்ளனர்
அதாவது காங்கிரஸ் 18 எம்எல்ஏக்கள் மற்றும் மஜாதா 2 எம்எல்ஏக்கள் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இவர்கள் செய்யும் மேஜிக் தான் இன்று மாலை நான்கு மணிக்கு எடியூரப்பா முதல்வராக தொடர்வதற்கு பெருந்துணையாக இருக்கும்.