டி.டி.வி.தினகரனின்ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அந்த  18 தொகுதிகளும் காலி உள்ளது என அறிவிக்கலாம் என்றும் அதில் இடைத் தேர்தல் நடத்தலாம் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.

டிடிவிஆதரவு 18 எம்எல்ஏக்கள்தகுதிநீக்கம்செய்யப்பட்டவழக்கில் 3வதுநீதிபதிஎம்.சத்தியநாராயணன்தீர்ப்புவழங்கியுள்ளார். இதில் 18 எம்எல்ஏக்கள்பதவியைபறித்ததுசெல்லும்எனசென்னைஉயர்நீதிமன்றம்தீர்ப்புவழங்கியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆகையால்எடப்பாடிஆட்சிதப்பியது. தகுதிநீக்கம்செய்ததில்எந்தத்தவறும்இல்லைஎன்றுநீதிபதிசத்தியநாராயணாதனதுதீர்ப்பில்தெரிவித்துள்ளார். சபாநாயகர்தனபால்முடிவில்எந்ததவறும்இல்லைஎனவும் நீதிபதிகூறியுள்ளார். மேலும்பதவிபறிக்கப்பட்டதைஎதிர்த்து 18 பேரின்மேல்முறையீட்டுமனுக்கள்தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது.

தலைமைநீதிபதி, 18 பேரையும்தகுதிநீக்கம்செய்யபேரவைத்தலைவருக்குஅதிகாரம்உள்ளதுஎன்றும்பேரவைத்தலைவர்உத்தரவில்நீதிமன்றம்தலையிடமுடியாதுஎன்றும்தீர்ப்பளித்தார்.

அதே நேரத்தில் அந்த 18 தொகுதிகளும் இனி காலியானது என அறிவிக்கலாம் என்றும், அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தலாம் என நீதிபதிசத்யநாராயணன்தனதுதீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து 18 தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும் தமிழக சட்டப் பேரவைச் செயலாளர் 18 தொகுதிகளும் காலியாக உள்ளது என அறிவிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.

ஏற்னவே திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தற்போது மேலும் 18 தொகுதிகளையும் சேர்ந்து மொத்தம் 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும், இது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுத்து இடைத் தேர்தல் அறிவிக்குமா ? அல்லது நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்துமா என தெரிய வரும்.