wife lie down on husband chest

நைசா நெஞ்சில் சாய்கிறாரா உங்கள் மனைவி..? உஷார்... இதை கண்டுபிடிச்சுடுவாங்க...!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கணவன் மனைவி உறவுகள் என்றாலே அது ஒரு தனி உறவு தான். சிறந்த உறவு தான்... வேறு எதனுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாத உன்னதமான உறவு தான்...

இதெல்லாம் சரி....என்னதான் அன்பு இருந்தாலும் மனைவிக்கு எப்போதுமே...கணவர் மீது தனி கவனம் இருக்கும்...அன்பாக பாசமாக கணவர், மனைவி மீது தீராகாதல் கொண்டாலும், முழுமையான நம்பிக்கை என்பது கணவர் மீது ஒரு மனைவி வைப்பாளா? என்றால்...நம்பிக்கை வைப்பாங்கதான்..ஆனால் சில நேரம் தடுமாறும்...

அதற்கு காரணம் கணவர் தான்...அதாவது ஏதோ ஒரு விஷயத்தில் சில மாற்றங்கள், சில தடுமாற்றம், புதிய நட்பு, வேலைப்பளு இதில் ஏதோ ஒன்று ஆண்களுக்கு கொஞ்சம் அப்செட் செய்ய வைக்கும்.இது போன்ற காலக்கட்டத்தில் “கணவர் தம் மீது சரியாக கவனம்செலுத்த வில்லையே என மனைவி நினைப்பது இயல்பே....அதுவே சில நாட்கள் தொடர்ந்தால் சந்தேகம் கூட வரும்....

இது போன்ற சமயத்தில் தான்.....ஆண்கள் என்ன நினைக்கிறார்கள் ?எதுவாக இருக்கும்? தம் மீது கணவருக்கு பாசம் இல்லையோ என பல கேள்விகளுடன்,மன கவலையோடு உங்கள் மார்பில் சாய்ந்து கொள்வாள் பெண்...அதாவது மனைவி

இது போன்று நெஞ்சில் நைசா சாய்ந்து ஒரு கேள்வியை கேட்பார் மனைவி...அதில் “ என்னங்க...உங்களுக்கு என்னை தவிர வேறு யாரையும் பிடிக்காது தானே?....” மெதுவாக இப்படி கேட்டாலே போதும்.....

நீங்கள் யார் என்பதை உங்களுக்கு தெரியாமலலேயே உங்கள் ஹார்ட்பீட்(இதய துடிப்பு ) காண்பித்துவிடும்...

நீங்கள் எப்படி பட்டவர்கள் என்று ?அதாவது மனைவி கேட்டது போன்று எதுவும் இல்லை என்றால் உங்கள் ஹார்ட் பீட் நார்மலாக தான் இருக்கும்...

இதுவே ஏதோ ஒரு புதிய நட்புடன் நீங்கள் பேசி வந்தால் கூட,மனைவி உங்கள் நெஞ்சில் சாய்ந்த படியே உங்களை எடைப் போட்டு விடுவாள் ....

மனைவி கேட்கும் கேள்விக்கு உங்கள் ஹார் பீட் பதில் சொல்லும்....அதனை உணரவே மனைவி எப்போதும் கணவரின் நெஞ்சில் சாய்ந்துக் கொள்ள விரும்புவாள் என்பது குறிப்பிடத்தக்கது