கையில் "கயிறை" இத்தனை நாட்களுக்கு மேல் கட்ட கூடாது...! கட்டினால் சக்தி இல்லை...!
கையில் கருப்பு கயிறை இத்தனை நாட்களுக்கு மேல் கட்ட கூடாது...!
தெய்வ திருத்தலங்களுக்கு சென்றால், அங்கு பிரசாதமாக கிடைக்கும் பொருட்களை வாங்கி வந்து நம் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்போம் அல்லவா..
அதில் மிக முக்கியமான ஒன்று நம் கையில் கட்டும் கயிறு, சிகப்பு நிறம், கருப்பு நிராம், மஞ்சள்,ஆரஞ்சு என சில கலர்களில் கடவுளை நினைத்து பக்தியாய் கட்டுவார்கள்.
காசி, திருப்பதி போன்ற கோவில்களிலும், இன்னும் சில அம்மன் கோவில்களிலும் கருப்பு கயிறு வாங்கி கட்டிக்கொள்கிறார்கள்.
சில கோவில்களில் பிரசாதமாக சிவப்பு, மஞ்சள் கயிறு தருவார்கள். அதனை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும்.
வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும்.
இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே.
அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ..பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும். அல்லது கோவில் மரத்தில்கட்டி விடுவது நல்லது.
அதற்கு மேல் அந்த கயிற்றை கையில் கட்டியிருந்தால் அதற்கு சக்தி இருக்காது. எனவே அதற்கு மேல் அந்த கயிற்றை கட்டியிருப்பது நல்லதல்ல.
அனால் இந்த தகவல் தெரியாத பலரும், பல நாட்களாக கயிறை தன் கையில் கட்டி இருப்பார்கள்.
இதனால் எந்த பயனும் இருக்காதாம்...