முடி வளர்ச்சியைத் தூண்ட அரிசி வடித்த நீரை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
முடியின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் அரிசி வடித்த நீர் மிகச் சிறந்தது. இதில் அமினோ அமிலங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன.
சேதமடைந்த முடியைச் சரிசெய்யும் 'இனோசிட்டால்' என்ற மூலப்பொருள் அரிசி வடித்த நீரில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தினமும் அரிசி வடித்த நீரால் முடியை அலசி வந்தால், முடி உதிர்வு குறைந்து பொடுகுத் தொல்லையும் நீங்கும்.
அரிசி வடித்த நீருடன் வெங்காயச் சாற்றைக் கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால், முடி உதிர்வு குறைய உதவும்.
சிறிதளவு அரிசி வடித்த நீரில், ஆரஞ்சு தோல் பொடியை நன்கு கலந்து முடியில் தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு அலசிவிடவும்.
கிரீன் டீயுடன் சிறிதளவு அரிசி வடித்த நீரைக் கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யவும். இது சேதமடைந்த மற்றும் எளிதில் உடையும் முடியைச் சரிசெய்ய உதவுகிறது.
Low Calorie Foods: வெயிட் குறைக்கணுமா? இந்த 7 உணவுகளை தினமும்சாப்பிடுங்க!
Sleep Fruits: இரவில் நிம்மதியாக தூங்க இந்த பழங்களை தவறாமல் சாப்பிடுங்க
Money Saving Habits: இந்த 5 பழக்கங்கள் உங்களை பணக்காரர் ஆக்கும்!
Silver Bracelets: கைகளுக்கு அழகூட்டும் சில்வர் பிரேஸ்லெட் டிசைன்கள்.!