வீணாகும் கோயில் பூக்களில் தூபகுச்சிகள் தயாரித்து, 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்தவர் வந்தனா.
யார் இந்த வந்தனா?
லக்னோவில் வசிப்பவர் வந்தனா. இவருக்கு நான்கு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 2009 ஆம் ஆண்டு இவரது தந்தைக்கு மூளை சாவு ஏற்பட்டது. அதன்பிறகு மூளையில் மூன்று முறை ரத்தக் கசிவு ஏற்பட்டது. பிறகு அவரது தந்தை 2017ல் இறந்தார். வந்தனா தனது பெற்றோர்களை பராமரிப்பதற்காகவே இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் ஹிந்தி மற்றும் எம் எஸ் டபிள்யூ ஆகிய மொழிகளில் முதுகலை பட்டம் பெற்று சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கோயில் பூக்களில் இருந்து தூப குச்சிகளை தயாரிக்கும் பயிற்சி:
வந்தனா கோயில்களில் சிதறி கிடக்கும் கழிவு பூக்களை எடுத்து அவற்றின் இதழ்களை பிரித்து அதிலிருந்து தூபக் குற்றிகளை தயாரிக்க தயாரிக்கிறார். 2006 ஆம் ஆண்டு முதல் அவர் நகர மற்றும் கிராமத்தை சேர்ந்த பெண்கள் குழுவை உருவாக்கி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை பல்வேறு வகையான வேலைகளில் ஈடுப்படுத்தினார்.
மேலும் இவர் திருநங்கைகளுக்காக நீண்ட காலம் செயல்பட்டு வந்தார். குறிப்பாக சிறையில் இருக்கும் பெண் கைதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக பிரசாரத்தின் தொடங்கினார் அதற்காக அவர் சிறை அதிகாரிகளை தொடர்புக்கொண்டு நபார்டு வங்கியில் இருந்து நிதி பற்றி இந்த பெண்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வேலை செய்ய பயிற்சி அளித்தார்.
இதுவரை 20 ஆயிரம் பேருக்கு வேலை:
வந்தனா 2006 இல் சமூகப் பணியில் முதுகலை பெற்றார். இதுவரை 20 ஆயிரம் பெண்களுக்கு வேலை வழங்கியுள்ளார். அதில் இதுவரை 11,000 பெண்கள் பயிற்சி எடுத்துள்ளனர். இதுபோன்ற அனைத்து பணிகளிலும் அவர்களுக்கு நபார்ட் வங்கி நிதி உதவி வழங்குவதுடன், அதன் நிர்வாக முழு உதவியும் வழங்குகிறது.
