ரயில் பயணிகள் கவனத்திற்கு .!!! 139 எண்ணுக்கு கால் பண்ணுங்க..!!! ஐ.ஆர்.சி.டி.சி சிறப்பு ஏற்பாடு...!!!
ரயில் பயணிகள் கவனத்திற்கு .!!! 139 எண்ணுக்கு கால் பண்ணுங்க..!!! ஐ.ஆர்.சி.டி.சி சிறப்பு ஏற்பாடு...!!!
ரயில் நிலையத்தில், வாடகைக் கார்கள் மற்றும் வீல் சேர் வசதியை பெறுவதற்கு, 139 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது .
139 என்ற எண்ணில் தொடர்புகொண்டு , இதுவரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்வதற்கும், டிக்கெட்டிற்கான பணத்தை திரும்பப் பெறவும் பயன்படுத்தப் படுகிறது.
இந்நிலையில் கார்கள்,சுமை தூக்குவோர்,வீல் சேர் ஆகிய வசதிகளை பெறவும், இனி இந்த நம்பரையே பயன்படுத்தலாம் என ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது. .
தற்போது சோதனைக்காக , இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி தெரிவிதுள்ளது குறிப்பிடத்தக்கது.